மாவோ பயங்கரவாதிகள் பதுங்கல் என சந்தேகம்: தமிழகத்தில் வேட்டை

சென்னை: தமி­ழ­கத்­தில் மாவோ பயங்­க­ர­வாத அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள் பதுங்கி இருப்­ப­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­வதை அடுத்து, மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­களில் தேசிய புல­னாய்வு முகமை அதி­கா­ரி­கள் அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

இதை­ய­டுத்து யாரே­னும் பிடி­பட்­ட­னரா என்­பது குறித்த தக­வல் ஏதும் இல்லை.

இதே­போல் கேரளா, கர்­நா­ட­கா­வி­லும் சோதனை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

நேற்று முன்­தி­னம் சென்னை, கோவை, கிருஷ்­ண­கிரி, தேனி, புதுக்­கோட்டை, கன்­னி­யா­கு­மரி, சேலம் உள்­ளிட்ட மாவட்­டங்­களில் தேசிய புல­னாய்வு முகமை அதி­காரி­கள், தனித்­த­னிக் குழுக்­களா­கச் சென்று சோதனை மேற்­கொண்­ட­னர்.

சென்­னை­யி­லும் கோவை­யி­லும் மட்­டும் ஒரே சம­யத்­தில் மூன்று இடங்­களில் இந்­தச் சோதனை நடை­பெற்­றது. அம்­பத்­தூர், வில்­லி­வாக்­கம், செங்­குன்­றம் பகு­தி­களில் மாவோ பயங்­க­ர­வா­தி­க­ளோடு தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று சந்­தே­கப்­ப­டு­வோ­ரின் வீடு­களில் இந்­தச் சோதனை நடத்­தப்­பட்­டது என்­றும் இதே­போல் மேலும் சில­ரது வீடு­களில் சோதனை நடக்க வாய்ப்­புள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே பெங்­க­ளூ­ரு­வில் ஐந்து, கேர­ளா­வில் மூன்று இடங்­க­ளி­லும் புல­னாய்வு முகமை அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்­ட­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

சில முக்­கிய ஆவ­ணங்­கள், தக­வல்­கள் கிடைத்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­படும் நிலை­யில், தேசிய புல­னாய்வு முகமை எந்­த­வித அதி­கா­ர­பூர்வ அறிக்­கை­யும் வெளி­யி­ட­வில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!