சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சுதாகரன் நாளை சிறையிலிருந்து விடுவிக்கப்படவிருக்கிறார்.
அந்த வழக்கில் நான்காவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதில் சசிகலாவும் இளவரசியும் தங்களது தண்டனைக் காலத்தை முழுமையாக முடித்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களுடன் சிறைத் தண்டனை அனுபவித்த சுதாகரனுக்கு தண்டனைக் காலத்துடன் சேர்த்து ஏறக்குறைய ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தத் தொகையை சுதாகரனால் கட்ட முடியாத காரணத்தால் கடந்த பிப்ரவரி மாதம் அவர் விடுதலை செய்யப்படவில்ைல.
இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி கூடுதலாக ஓராண்டு தண்டனை அனுபவிக்க நேரிட்டது.
இதற்கிடையே ஏற்கெனவே பாளையங்கோட்டை சிறையில் தண்டனை அனுபவித்துள்ளதால் அவருக்குக் கூடுதலாக விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க வேண்டும் என்று சுதாகரன் தரப்பினர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சுதாகரன் அனுபவித்து வரும் கூடுதலான ஓராண்டு தண்டனைக் காலத்தில் 89 நாட்களை குறைத்தது. அதன்படி அக்டோபர் 16ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்படவுள்ளார்.
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றது. சசிகலாவின் சொந்த அக்கா மகன்தான் சுதாகரன். இவர், டி.டி.வி. தினகரனுக்கு உடன் பிறந்த தம்பி.
நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தில் பெண் எடுத்துள்ள சுதாகரனுக்கு, தன் வீட்டுத் தரப்பிலும் சரி மாமனார் வீட்டுத் தரப்பிலும் சரி யாரும் ரூ.10 கோடி அபராதம் செலுத்த முன் வரவில்லை.
மேலும் பத்து கோடி ரூபாய் அப ராதத்தைக் கட்டியிருந்தால் அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழும்.
இந்நிலையில் சிறையிலிருந்து விடுதலையானதும் அரசியலிலிருந்து ஒதுங்கி ஆன்மிகப் பணியில் ஈடு படுவார் என்று அவருக்கு நெருக்க மானவர்கள் சிலர் கூறுகின்றனர்.