கோவில்பட்டி: கோவில்பட்டியில் உள்ள ஹோட்டலில் கோழி மசாலா வாங்கிச் சாப்பிட்ட தாயும் மகளும் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
தங்கப்பநகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் இளங்கோவனின் மனைவி கற்பகவல்லி(33). இவரது மகள் ஏழு வயது தர்ஷினி.
சென்ற செவ்வாய்க்கிழமை இரவு கடலையூர் சாலையில் உள்ள ஹோட்டலுக்கு மகளுடன் சென்ற கற்பகவல்லி கோழிக் குழம்பு வாங்கி வந்து வீட்டில் தயார் செய்த உணவு டன் சேர்த்து சாப்பிட்டதாகக் கூறப் படுகிறது. அப்போது வயிறு எரிச்சல் ஏற்பட்டதால் அருகிலுள்ள கடையி லிருந்து குளிர்பானம் வாங்கி அவர்கள் குடித்துள்ளனர்.
இருவருக்கும் சிறிது நேரத்தில் வாந்தி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உறவினர்கள் அவர்களை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சேர்ப்பதற்குள் அவர்கள் இறந்துவிட்டனர்.
இதையறிந்து அங்கு வந்த போலிசார், இருவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், கோழி மசாலாவை விற்ற ஹோட்டல், குளிர்பானக் கடை ஆகிய இரண்டு இடங்களிலும் சோதனை நடத்தினர்.
ஆனால் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகுதான் காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிக்கன் குழம்பு சாப்பிட்டு குளிர்பானம் குடித்தால் இறப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.

