தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நால்வரைக் கொன்ற டி23 புலி 21 நாள்கள் கழித்து பிடிபட்டது

2 mins read
c0644740-44ed-4f9e-b04a-c9129133aed9
-

நீல­கிரி: நான்கு பேரைக் கொன்று விட்டு, கடந்த 21 நாட்­க­ளாக வனத்­துறை அதி­கா­ரி­கள், கால்நடை மருத்துவர்களின் கையில் சிக்­கா­மல் ஆட்­டம் காட்டி வந்த டி23 என்ற ஆட்­கொல்லி புலி, இரண்­டா­வது முறை­யாக மயக்க ஊசி செலுத்­தப்­பட்ட நிலை­யில் ஒரு­வ­ழி­யா­கப் பிடி­பட்­டுள்­ளது.

புலிக்கு உட­லில் சில இடங்­களில் காயம் ஏற்­பட்­டுள்­ள­தால், மருத்­துவப் பரி­சோ­த­னைக்­குப் பிறகு அதனை வண்­ட­லூர் பூங்­கா­வில் விட­லாம் எனத் தெரி­கிறது.

நீல­கிரி மாவட்­டம், மசி­ன­குடி வனப்­ப­கு­தி­யில் இது­வரை நான்கு பேரைக் கொன்ற ஆட்­கொல்லி புலி 21 நாட்­க­ளுக்கு பின்­னர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்­கப்­பட்­டுள்­ளது.

இது அப்­ப­குதி மக்­கள் மத்­தி­யில் மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

நால்­வ­ரை புலி கொன்ற போது அதனைச் சுட்­டுக்­கொல்ல வேண்­டும் என்று பொது­மக்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

அத­னை­ய­டுத்து, புலி­யைச் சுட்­டுக்­கொல்ல வனத்­து­றை­யி­னர் முடி­வெ­டுத்­த­னர்.

இதைத்­தொ­டர்ந்து, "மக்­க­ளின் உயிர் மிக­வும் முக்­கி­யம்­தான். ஆனால், அதற்­காக புலி­யைக் கொல்­ல­வேண்­டாம்," என்று அர­சி­யல் கட்­சி­யி­னர் ஒரு­சி­லர் கருத்து கூறி­னர்.

வன­வி­லங்­குப் பிரி­யர்­களும் புலி­யைச் சுட்­டுக்­கொல்­வதை கைவிட­வேண்­டும் என்று வலி­யு­றுத்தி வந்­த­னர்.

இந்நிலையில், புலி­யைக் கொல்­வதை எதிர்த்து, சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடரப்பட்ட நிலை­யில், புலி­யைச் சுட்­டுக்­கொல்வதற்கு உயர் நீதி­மன்­றம் தடை விதித்­தது.

இதைத்­தொ­டர்ந்து, புலியை மயக்க ஊசி செலுத்­திப் பிடிக்க வனத்­து­றை­யி­னர் தொடர்ந்து போராடி வந்­த­னர்.

இந்­நி­லை­யில், இப்­போது அந்­தப் புலி அகப்­பட்­டுள்­ளது.

கூட­லூர், மசி­ன­குடி பகு­தி­களில் இது­வரை நால்­வ­ரை­யும் 50க்கும் மேற்­பட்ட கால்­ந­டை­க­ளை­யும் புலி கொன்­றுள்­ளது. அதைப் பிடிக்க இரண்டு கும்கி யானை­கள், மோப்ப நாய்­கள் பயன்­படுத்­தப்­பட்­டன.