நாகப்பட்டிணம்: தமிழகத்தில் பெரும் பாலான மக்கள் எதிர்பார்த்தது போலவே நேற்று விஜயதசமி திரு நாளில் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பல்வேறு தரப்பினரும் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங் களைத் திறப்பதற்கு அனுமதி கோரியதை அடுத்து, நேற்று முதல் ஆலயங்களைத் திறப்பதற்கு தமிழக அரசு இசைந்துள்ளது.
நாகை மாவட்டம், வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் தர்கா, எட்டுக்குடி முருகன், சிக்கல் சிங்காரவேலர், நீலாயதாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் மனநிறைவுடன் வழிபாடு நடத்தினர்.
நாகூர் தர்காவில் இஸ்லா மியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வழிபட்டனர்.
இதேபோல், வேளாங்கண்ணி பேராலயத்தில் பாதிரியார்கள் மற்றும் பக்தர்கள் பங்களிப்போடு பிரார்த்தனை செய்யப்பட்டு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
குறிப்பாக, நேற்று பெற்றோர் குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் சென்று அரிசியில் எழுதி அவர்களின் கல்விப் பயணத்தைத் தொடங்கி வைத்தனர். இதனால் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, அனைத்து வகை கடைகளும் உணவகங்களும் இரவு 11 மணி வரை இயங்க வும் அனுமதி தரப்பட்டுள்ளது.
திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேரும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேரும் கலந்து கொள்ளலாம்.
திருவிழாக்கள், அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் அரசு கூறியுள்ளது.
இதற்கிைடயே, அனைத்து நாட்களிலும் கோயில்களில் வழிபட அரசு அனுமதித்துள்ள முடிவை எந்த ஒரு கட்சியும் தனது வெற்றியாகப் பார்க்கக்கூடாது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
"பாஜகவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து கோவில்கள் திறக்கப்படவில்லை. மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்தே கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன," என அவர் தெரிவித்துள்ளார்.