கடலூர்: மாணவன் ஒருவனை அடித்து, உதைத்து மூர்க்கமாக தாக்கிய சுப்பிரமணியன் என்ற ஆசிரியரை வரும் 27ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
போலிசாரின் விசாரணையின் அடிப்படையில் சுப்பிரமணியனை அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி அன்று மதியம் பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல் பாடம் படிக்கும் மாணவர்கள் சஞ்சய் சுசீந்திரன், சந்துரு சூரியா, அஜய் குமார் பாலன் உள்ளிட்டோரை ஆசிரியர் சுப்பிரமணியன் ஏன் தனது வகுப்பிற்கு வரவில்லை என்று கேட்டு கண்டித்துள்ளார்.
பின்னர் பள்ளியில் முட்டி போட வைத்திருந்த மாணவரின் தலைமுடியைப் பிடித்து காலால் மிதித்து கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இதைக் கண்டு பொறுமை இழந்த மாணவர் ஒருவர் தனது கைபேசியில் வகுப்பில் நடந்த சம்பவத்தை காெணாளியாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதைக் கண்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இதன் காரணமாக ஆசிரியர் மீது சிறுவர்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலிசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

