ஒய்.ஜி.மகேந்திரன் மகள் வீட்டுக்கு பூட்டு போட்டு முத்திைர வைத்த அதிகாரிகள்

ஒய்.ஜி.மகேந்திரன் மகள் வீட்டுக்கு பூட்டு போட்டு முத்திைர வைத்த அதிகாரிகள்

2 mins read
b523bb70-993b-4746-9399-0bfca1f6db4f
மதுவந்தி. படம்: ஊடகம் -

சென்னை: தனி­யார் நிதி நிறு­வ­னத்­தில் வாங்­கி­யி­ருந்த ரூ.1.21 கோடி கடனை திருப்­பிச் செலுத்­தா­மல் ஏமாற்றி வந்­த­தால் நீதி­மன்ற உத்­த­ர­வுப்­படி நகைச்­சுவை நடி­கர் ஒய்.ஜி.மகேந்­தி­ர­னின் மகள் மது­வந்தி வீட்டை வங்கி அதி­கா­ரி­கள் பூட்டி முத்­திரை வைத்­த­னர்.

நிதி நிறு­வன அதி­கா­ரி­கள் பல மாதங்­க­ளாக வட்­டிப் பணம் கட்­டச் சொல்­லி­யும் பணம் கட்­டா­மல் மது­வந்தி, 43, இழுத்­த­டித்து வந்­த­தாக கூறப்­ப­டு­கிறது.

மது­வந்தி சென்னை ஆழ்­வார்­பேட்டை வீனஸ் காலனி, 2வது குறுக்­குத் தெரு­வில் உள்ள ஆசி­யானா அப்­பார்ட்­மென்­டில் உள்ள சொந்த வீட்­டில் கடந்த சில ஆண்­டு­க­ளாக வசித்து வரு­கி­றார்.

இவர் வீடு வாங்­கு­வ­தற்­காக கடந்த 2016ஆம் ஆண்டு தனி­யார் நிதி நிறு­வ­னத்­தில் ஒரு கடன் வாங்­கி­யுள்­ளார். அதன்­பின்­னர் சில மாதங்­களுக்கு தவணையை முறை­யாக கட்­டி­யுள்­ளார். இருப்பினும், வாங்­கிய கட­னில் 1.21 கோடி ரூபாயை திருப்­பிச் செலுத்­தா­மல், மது­வந்தி தொடர்ந்து நிதி நிறு­வ­னத்தை அலைக்­க­ழித்து வந்­த­தாகக் கூறப்­ப­டு­கிறது.

இதனை அடுத்து வங்கி அதி­கா­ரி­கள் வட்­டி­யு­டன் அசலை சேர்த்து ஒரு கோடியே 21 லட்­சத்து 30 ஆயி­ரத்து 867 ரூபாயைக் கட்­டச் சொல்லி நோட்­டீஸ் அனுப்­பி­யுள்­ள­னர். ஆனால், அதற்குரிய பதில் சொல்­லா­மல் மது­வந்தி இருந்­த­தால், அந்த நிதி நிறு­வ­னம் மெட்­ரோ­பாலிட்­டன் அல்­லி­கு­ளம் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடர்ந்­துள்­ளது.

இந்த வழக்கை விசா­ரித்த நீதி­பதி, மது­வந்­தி­யின் வீட்­டிற்கு 'சீல்' வைத்து வீட்டை நிதி நிறு­வ­னத்­தி­டம் ஒப்­ப­டைக்க உத்­த­ர­விட்­டுள்­ளார்.

இதன்­படி நேற்று முன்­தி­னம், மது­வந்­தி­யின் வீடு, நீதி­மன்ற ஊழி­யர்­கள் முன்­னி­லை­யில் போலி­சார் பாது­காப்­போடு 'சீல்' வைக்­கப்­பட்டு வீட்டு சாவி நிதி நிறு­வ­னத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

அப்­போது, "அடுத்த மாதம் பணத்தைக் கட்டி விடு­கி­றேன். தயவு செய்து 'சீல்' வைக்­க­வேண்­டாம்' என அதி­கா­ரி­க­ளி­டம் மது­வந்தி கெஞ்­சிய காணொளி வெளிவந்துள்ளது.

மது­வந்தி தற்­போது பாஜகவில் நிர்­வா­கி­யாக உள்­ளார்.