முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான, தமிழகம் முழுவதும் உள்ள 43 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


விராலிமலை அருகே இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றதை அடுத்து, அங்கே அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். இதனையடுத்து, அப்பகுதியில் கூடுதல் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


விஜயபாஸ்கர் கடந்த ஐந்து ஆண்டுகளில் வருமானத்திற்குமேல் ரூ.27 கோடிக்கு சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலிசாரின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை காவல்நிலையத்தில் விஜயபாஸ்கர்மீதும் அவரின் மனைவி ரம்யாமீதும் தமிழக லஞ்ச ஒழிப்புப் போலிசார் சொத்துக் குவிப்பு வழக்கு பதிந்துள்ளனர்.


அமைச்சராக இருந்தபோது விஜயபாஸ்கர் மருத்துவக் கருவிகள் வாங்கியதில் முறைகேடு செய்துள்ளதாகவும் டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரம், 53 லட்சத்திற்கு பிஎம் டபிள்யூ கார், 40 லட்சத்திற்கு 85 சவரன் தங்க நகைகள் வாங்கி உள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, விஜயபாஸ்கரின் மனைவிக்கும் மூத்த மகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தனிமைப்படுத்திக்கொண்டுள்ள அவரின் மனைவியிடம் கவச உடையணிந்தபடி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!