புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்குச் சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள 43 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை அருகே இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றதை அடுத்து அங்கே அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். இதையடுத்து, அப் பகுதியில் போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
விஜயபாஸ்கர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானத் துக்கும் அதிகமாக ரூ.27 கோடிக்கு சொத்துகளை வாங்கி குவித்துள்ள தாக லஞ்ச ஒழிப்புத்துறை போலி சாரின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை காவல்நிலையத்தில் விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் தமிழக லஞ்ச ஒழிப்புப் போலிசார் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிந்துள்ளனர்.
"விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது, கொரோனா காலத்துக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்துள்ளார். டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரம், 53 லட்சத்திற்கு பிஎம்டபிள்யூ கார், 40 லட்சத்திற்கு 85 சவரன் தங்க நகைகளை வாங்கி உள்ளார்," என புகார்கள் எழுந்துள்ளன.
முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜய பாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோருக்குச் சொந்த மான இடங்களில் இச்சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
இலுப்பூரிலுள்ள விஜயபாஸ்கரின் வீடு, குடும்ப நண்பர்களான சுப்பையா, குபேந்திரன், பாண்டியன் ஆகியோரின் வீடுகள், மாமனார் வீடு, திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரி, இலுப்பூரிலுள்ள தங்கும் விடுதி, கல்வி நிறுவனங்களிலும் இந்தச் சோதனை நடந்தது.
இந்நிலையில், விஜயபாஸ்கரின் மனைவி, மூத்த மகளுக்கு கிருமி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தனிமைப்படுத்திக்கொண்டுள்ள விஜயபாஸ்கர் மனைவியிடம் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

