‘சசிகலாவுடன் பன்னீர்செல்வம் கட்சியை வழிநடத்துவார்’

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் புகழேந்தி, செய்தியாளர்களிடம் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தியில் உள்ளதாகவும் நேரம் வரும்போது அவரை நீக்கிவிட்டு சசிகலாவுடன் இணைந்து பன்னீர்செல்வம் கட்சியை வழிநடத்துவார் எனவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

"அதிமுக கட்சி எந்த நோக் கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்ைதக் கடந்து திசைமாறி சென்றுகொண்டுள்ளது. அதிமுக கட்சி யாருடைய சொத்தும் அல்ல, இது ஏழைகளின் சொத்து. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே கட்சியை வழிநடத்தமுடியும்," என்றார்.

அத்துடன், சசிகலாவை அனு மதிக்கமாட்டோம் என்று கூறுவதற்கு ஜெயக்குமாருக்கு என்ன உரிமை உள்ளது என்று கேள்வி எழுப்பிய புகழேந்தி, "சசிகலாவை நம்பிேனார் கைவிடப்படார்," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!