மாணவர்களின் இல்லங்களுக்கே சென்று பாடம் போதிப்பு

சென்னை: 'மக்­க­ளைத் தேடி மருத்­து­வம்', 'மக்­க­ளைத் தேடி பல் மருத்­து­வம்' ஆகிய திட்­டங்­களைத் தொடர்ந்து, 'இல்­லம் தேடி கல்வி' என்ற திட்­டத்­திற்­கான விழிப்­பு­ணர்வு பய­ணத்தை மாநில பள்­ளிக்­கல்­வித்­துறை அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி சென்­னை­யில் நேற்று முன்­தி­னம் தொடங்­கி­வைத்­தார்.

ஒன்­றாம் வகுப்பு முதல் எட்­டாம் வகுப்பு வரை­யி­லான மாண­வர்­களின் கல்வி ஆற்­றலை மேம் படுத்­த­வும் கொரோனா காலத்­தில் படிக்­க­ மு­டி­யா­மல் விடு­பட்­டுப் போன பாடங்­களை மாண­வர்­கள் கற்­றுத் தெளி­ய­வும் வீடு­க­ளுக்கே சென்று பாடம் போதிக்­கப்­பட உள்­ளது.

இதற்­காக நடப்பு ஆண்டு வரவு செல­வுத் திட்­டத்­தில் ரூ. 200 கோடி அளவுக்கு நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்ளது.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்களி­டம் அமைச்­சர் கூறு­கை­யில், "இல்­லம் தேடி கல்வி' திட்­டம் முதல்­கட்­ட­மாக திருச்சி, தஞ்சை, நாகை, கட­லூர், திண்­டுக்­கல், திருச்சி, மதுரை, கிருஷ்­ண­கிரி, ஈரோடு போன்ற 12 மாவட்­டங்­களில் செயல்­ப­டுத்­தப்­படும்.

"இத­னைத்­தொ­டர்ந்து அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­பட உள்­ளது. தனி­யார் பள்ளி மாண­வர்­களும் இத் திட்­டத்­தின் கீழ் பயன்­பெ­ற­லாம்.

"மாண­வா்­க­ளின் வசிப்­பி­டம் அரு­கில் சிறிய குழுக்­கள் மூலம் தன்­னாா்வ­லா்­க­ளைக் கொண்டு மாலை 5 முதல் இரவு 7 மணி வரை வகுப்­பு­கள் நடை­பெற உள்­ளன. பாடம் படித்துத் தர ஆர்வ முள்ள தன்­னார்­வ­லர்­க­ளுக்கு ரூ.1,000 ஊக்­கத்­தொகை வழங்க வும் திட்­ட­மி­டப்­பட்டுள்ளது. இத்­திட்­டத்தை முதல்­வர் ஒரு வாரத்­தில் துவங்கி வைக்க உள்­ளார்," என்று சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!