குடியாத்தம்: சசிகலா தனது அரசியல் பேச்சை நிறுத்தினாலே ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைந்து விடும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனிசாமி கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தத் தில் நடந்த அதிமுக கூட்டத்தில் அவர் பேசியபோது, "அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மீது உண்மையான பற்று சசிகலாவுக்கு இருக்குமானால், அவர் இனி அரசியல் பேசக்கூடாது. அவர் கட்சிக்கு தொண்டராக வரவில்லை, ஜெயலலிதாவிற்கு உதவியாளராக வந்தவர். காமராஜர், மகாத்மா காந்தி போன்றவர்களுக்குப் பலர் உதவியாளர்களாக இருந்துள்ளனர். அவர்கள் யாரும் இப்படி அரசியலுக்கு வரவில்லை.
ஜெயலலிதாவிடம் இருந்து பிரிந்த சசிகலா மீண்டும் ஜெயலலிதாவுடன் வந்து சேர்ந்தபோது ''நானோ, எனது உறவினர்களோ அரசியலில் ஒருநாளும் ஈடுபடமாட்டோம்,'' என எழுதிக் கொடுத்துவிட்டுத் தான் மீண்டும் ஜெயலலிதாவுடன் வந்து இணைந்தார். அவர் சொன்ன வாக்கை சசிகலா காப்பாற்றவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

