கடனைத் திருப்பிக் கேட்டதால் குடும்பமே சேர்ந்து கொன்றது

கடனைத் திருப்பிக் கேட்டதால் குடும்பமே சேர்ந்து கொன்றது

2 mins read
13f886ea-b3cb-4ee9-8222-ebddc3c10852
-

கும்­ப­கோ­ணம்: கும்­ப­கோ­ணம் அருகே காணா­மல் போன­தாக கடந்த ஒரு­வா­ர­மா­கத் தேடப்­பட்டு வந்த பெண்ணை அவ­ரது சக தோழியே கொன்று கரு­வே­லங்­காட்­டில் புதைத்­தது வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது.

தனது லட்­சக்­க­ணக்­கி­லான பணம், நகைக­ளைத் திருப்­பிக்­கேட்­ட­தால், தோழி என்­றும் பாரா­மல் அவரை ஒரு குடும்­பமே அடித்­துக்­கொன்று கரு­வே­லங்­காட்­டில் புதைத்­துள்­ள­து.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் நால்­வரை போலிசார் கைது செய்­துள்­ள­னர்.

கும்­ப­கோ­ணம் அருகே உள்ள திருப்­ப­னந்­தாள் சிவ­பு­ரனி பகுதி யைச் சேர்ந்­த­வர் டேவிட். இவ­ரது மனைவி அனிதா, 30. இரு குழந்­தை­கள் உள்­ள­னர். டேவிட் வெளி­நாட்­டில் பணி­பு­ரிந்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், கடந்த 12ஆம் தேதி திருப்­ப­னந்­தா­ளில் உள்ள வங்­கிக்­குச் சென்­று­விட்டு வருவ தாகக் கூறி­விட்­டுச் சென்ற அனிதா மீண்­டும் வீடு திரும்­ப­வில்லை.

திருப்­ப­னந்­தாள் காவல் நிலை யத்­தில் உற­வி­னா்­கள் புகார் தர, அனி­தா­வின் கைபேசி எண்­க­ளைப் பயன்­ப­டுத்தி போலி­சார் விசா­ர­ணை­யைத் தொடங்­கி­னர்.

அப்­போது, அவ­ரது எதிர் வீட்­டில் வசித்து வரும் கார்த்­திக், 31, கடை­சி­யாக அனி­தாவை கைபேசி யில் அழைத்­தது தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து, கார்த்­திக்­கி­டம் நடத்­திய விசா­ர­ணை­யில், அனி தாவைக் கொலை செய்­த­ததை ஒப்­புக்­கொண்­டார்.

"அனி­தா­வும் சத்­யா­வும் பள்­ளித் தோழி­கள். இரு­வ­ரும் ஒரே ஊரில் திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­தால் அவ்­வப்­போது சத்யா வீட்­டுக்கு அனிதா சென்று வந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், அனி­தா­விட மிருந்து சத்­யா­வும் அவ­ரது கணவா் கார்த்­திக்­கும் பல லட்ச ரூபாய் பணத்­தை­யும் 10 பவுன் நகை­களை­யும் வாங்கி ஏமாற்­றி­யுள்­ளனா்.

"தனது கண­வர் வெளி­நாட்­டி­லி­ருந்து ஓரிரு மாதங்­களில் திரும்பி வரப்­போவதாகக் கூறி தனது பணம், நகையை அனிதா திருப்­பிக்­கேட்­டுள்­ளார்.

"இதை­ய­டுத்து, கடந்த 12ஆம் தேதி பணம் தரு­வ­தா­கக் கூறி அனி­தாவை தங்­க­ளது வீட்­டுக்கு வர­வ­ழைத்து கார்த்­திக், சத்யா, 30, கார்த்­திக்­கின் தந்தை ரெங்­க­நா­தன், 60, சத்­யா­வின் சகோ­தரா் சர­வ­ணன், 31, ஆகி­யோர் சோ்ந்து தாக்­கிக் கொன்று புதைத்துள்ளனர்," என்று விசாரணையில் தெரியவந்த தாகப் போலிசார் கூறி­னர்.