தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கீழடியில் திறந்தவெளி தொல்லியல் கண்காட்சி

2 mins read
24e3774e-8235-4fc5-8e01-0b43aab68351
-

சிவ­கங்கை: கீழ­டி­யில் நவீன தொழில்­நுட்­பத்­து­டன் திறந்­த­வெளி தொல்­லி­யல் கண்­காட்சி அமைக்­கப்­படும் என தமிழ் வளர்ச்சி, தொல்­லி­யல் துறை அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு தெரி­வித்­துள்­ளார்.

கீழடி அக­ழாய்­வில் கிடைத்த ஏராள­மான தொல்­லி­யல் பொருள்களில் வெள்ளி நாண­யம் முக்­கி­ய­மா­ன­தாக கரு­தப்­ப­டு­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார்.

சிவ­கங்கை மாவட்­டம், திருப்­பு­வ­னம் அருகே உள்ள கீழடி, கொந்­தகை, அக­ரம், மண­லூர் ஆகிய நான்கு தளங்­களில் தமி­ழக தொல்­லி­யல்­துறை சார்­பில் அக­ழாய்­வுப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அப்­போது தமி­ழர் பெரு­மையை எடுத்­துக்­கூ­றும் வகை­யில் ஏரா­ள­மான பொருள்­கள் கிடைத்­தன.

நான்கு அக­ழாய்வுத் தளங்­க­ளை­யும் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு ஆய்வு செய்­தார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், கீழ­டி­யில் ரூ.12 கோடி செல­வில் அனைத்­து­லகத் தரத்­தில் அகழ் வைப்­ப­கம் அமைக்­கப்­படும் என்­றார்.

"கீழ­டி­யில் கிடைத்த வெள்ளி நாண­யம் மூன்­றாம் நூற்­றாண்­டைச் சேர்ந்­த­து. அங்கு கண்­ட­றி­யப்­பட்ட உறை­கி­ணற்­றில் மீன் உரு­வம் பொறிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­போன்று ஆறாம் கட்ட அக­ழாய்­வில் கிடைத்த பானை ஓட்­டி­லும் மீன் உரு­வம் உள்­ளது. இரண்­டுக்­கும் உள்ள கால ஒற்­று­மை­கள் ஆய்வு செய்­யப்­பட்டு வரு­கின்றன.

"கீழ­டி­யில் முதன்­மு­த­லாக திறந்­த­வெளி கண்­காட்சி நவீன தொழில் நுட்­பத்­து­டன் அமை­ய­வுள்­ளது," என்­றார் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு.

இதற்­கி­டையே, திரு­வண்­ணா­மலை­யில் சோழர் கால நடு­கல் கல்­வெட்டு (படம்) கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அங்­குள்ள வேடி­யப்­பன் கோவி­லில் உள்ள நடு­கல் கல்­வெட்டு, முத­லாம் பராந்­த­கன் கல்­வெட்டு, ஒரு வரி கல்­வெட்டு ஆகி­யவை சோழர் காலத்­தைச் சேர்ந்­தவை என திரு­வண்­ணா­மலை மாவட்ட வர­லாற்று ஆய்வு நடு­வம் தெரி­வித்­துள்­ளது.