கோவை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு இக்கட்சியின் ெபரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவோடு தலைமைக் கழகச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியில் இருந்து மாநில இளைஞரணித் தலைவர் கோவை ஈஸ்வரன் நேற்று பதவி விலகினார்.
தனது விலகல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 28 ஆண்டுகளாக என் வாழ்க்கையை மதிமுகவுக்காகவே அர்ப்பணித்து வாழ்ந்துவிட்டேன். கட்சியில் பலருக்கும் திறமை உள்ளது. வைகோவின் மகனால்தான் கட்சியை நடத்தமுடியும் என்பதில்லை. வைகோ யாரையும் கை காட்டத் தேவையில்லை," என்று ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு சரி எனத் தோன்றுவதை தனிஒருவராக செய்ய தனியாக மற்றொரு இயக்கத்தை தொடங்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, துரை வையாபுரிக்கு பதவி வழங்குவது குறித்து நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் 104 வாக்குகள் துரை வையாபுரிக்கு ஆதரவாகவும் இரு வாக்குகள் எதிராகவும் பதிவாகின.
இதைத்ெதாடர்ந்து செய்தியா ளர்களிடம் வைகோ கூறுகையில், ''துரையை அரசியலுக்கு வரக் கூடாது என சொல்லியிருந்தேன். ஆனால், கடந்த இரண்டு ஆண்டு களாகவே அவரை கட்சியில் இணைந்து பணியாற்றும்படி மதிமுக வினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் என் மகன் அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு புதுப் பொறுப்பை வழங்க வாரிசு அரசியல் காரணமல்ல; மாறாக தொண்டர்களின் விருப்பம், தகுதியின் அடிப்படையில்தான் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது," என்றார்.