சேலம்: தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கிய கைதிகளுக்கு அவர்களது உறவினர்களைச் சந்தித்துப் பேச விதிமுறைகளை மீறி போலிசார் சலுகை காட்டியுள்ளனர்.
மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள இந்தச் சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகளுக்கு சலுகை காட்டிய சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய் வாளர் உள்ளிட்ட ஏழு காவலர்களைப் பணி இடைநீக்கம் செய்து சேலம் காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஏழு பேரிடமும் துறை ரீதியான விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி யில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காெணாளியாக எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த புகாரை அடுத்து, ஒன்பது பேர் கும்பலை போலிசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசா ரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருநாவுக்கரசு, சபரி ராஜன், மணிவண்ணன், வசந்த் குமார், சதீஷ், பாபு, ஹேரன் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகிய ஒன்பது பேரையும் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை நேரில் முன்னிலைப்படுத்தினர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, வழக்கு விசார ணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, கைதிகளை மீண்டும் கோவையில் இருந்து சேலம் மத்திய சிறைக்குக் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, கோவை விமான நிலையம் அருகே வாகனம் திடீரென நிறுத்தப்பட்டது.
அப்போது, அங்கு காத்திருந்த கைதிகளின் உறவினர்கள் அவர் களைச் சந்தித்துப் பேசினர். அதன்பிறகு வாகனம் மத்திய சிறைக்குச் சென்றது.
இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, குற்றவாளிகளுக்குத் துணை போன ஏழு போலிசாரையும் பணியிடை நீக்கம் செய்து நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.
கைதிகள் தங்கள் உறவினர்களைச் சந்திக்க விரும்பினால், முறையாக நீதிமன்றத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும். ஆனால், கொடூர பாலியல் குற்றவாளிகளைச் சிறைக்குச் சென்று அழைத்து வரும் வழியில் உறவினர்களுடன் பேசுவதற்கு போலிசாரே அனுமதித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.