வேலூர்: வேலூரில் தனது காதலியைப் பார்ப்பதற்காக நகைகள், கைக்கடிகாரத்துடன் பெண் வேடமிட்டு, பர்தா அணிந்தபடி இரவு நேரத்தில் ஆடவர் ஒருவர் ஒய்யாரமாக நடந்து வந்துள்ளார்.
இந்த நடை உடை பாவனை களைக் கண்டு சந்தேகம் அடைந்த அவ்வூர் மக்கள், ஆடவர் திருடராக இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் அவரைப் பிடித்து விசாரித்தபோது, பர்தாவுக்குள் இருப்பது ஆண் என்பதைக் கண்டறிந்தனர்.
தனது காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக பெண் வேடமிட்டு வந்ததாக உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதைக்கேட்ட அப்பகுதி மக்கள் ஆடவரைக் கட்டி வைத்து அடித்துத் தாக்கியதில் மயங்கி விழுந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வேலூர் வடக்கு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வீடுகளுக்குச் சலவைக் கல் பதிக்கும் ஊழியராகப் பணிபுரியும் அன்பழகன் வேலூர் மாநக ராட்சிக்கு உட்பட்ட ஓல்டு டவுன் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர்.
அதை மறைத்து தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் 19 வயது பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.
பணியில் இருந்து வீடு திரும்பிய அன்பழகன் தனது காதலியைச் சந்திப்பதற்காக பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து வந்துள்ளார். இரவு நேரத்தில் வீதியில் நடந்து வந்த அன்பழகனின் உடல்மொழியும் காலில் அணிந்திருந்த ஆண்களின் காலணியும் அவரைக் காட்டிக்கொடுத்து விட்டன.