மத்திய சுகாதாரத் துறை: நகைச்சுவை நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமல்ல

மத்திய சுகாதாரத் துறை: நகைச்சுவை நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமல்ல

2 mins read
d995ccb0-1d99-412a-9c31-e32662dc3933
சென்னையில் நடிகர் விவேக் கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டபோது இப்படி கட்டை விரலைக் காண்பித்து அனைத்து மக்களையும் தடுப்பூசி போடும்படி ஊக்கமூட்டினார்.படம்: ஊடகம் -
Google News Preferred Icon

புது­டெல்லி: நகைச்­சுவை நடி­கர் விவேக்­கின் மர­ணத்­துக்கு கொரோனா தடுப்­பூசி கார­ண­மல்ல என மத்­திய ஆய்­வுக் குழு தெரி­வித்­துள்­ளது.

உயர் ரத்த அழுத்­தத்­தால் ஏற்­பட்ட மார­டைப்பு கார­ண­மா­கவே விவேக் உயி­ரி­ழந்­த­தா­க­வும் அக் குழு விவ­ரம் கூறி­யுள்­ளது.

இது­கு­றித்து மத்­திய சுகா­தா­ரத் துறை வெளி­யிட்­டுள்ள அறிக்கை யில், "நடி­கர் விவேக் மர­ணத்­துக்கு கொரோனா தடுப்­பூ­சி­யான கோவாக்­சின் கார­ண­மல்ல.

"அவ­ரது மர­ணம் இயற்கை யாகவே நிகழ்ந்­துள்­ளது. மார­டைப்பு ஏற்­பட்­ட­தன் கார­ண­மா­கவே அவர் உயி­ரி­ழந்­துள்­ளார். தடுப்­பூ­சி­யால் அவ­ருக்கு மர­ணம் ஏற்­ப­ட­வில்லை," என்று குறிப்­பிட்­டுள்­ளது.

தமிழ்த் திரை­யு­ல­கின் முன்­னணி நகைச்­சுவை நடி­க­ராக வலம் வந்­த­வர் நடி­கர் விவேக்.

இவர் கடந்த ஏப்­ரல் மாதம் 17ஆம் தேதி மார­டைப்பு கார­ண­மாக திடீ­ரென மர­ண­ம­டைந்­தார். இந்த தகவல் திரை­யு­ல­கி­னரை மட்­டு­மின்றி பொது­மக்­களையும் அதிர்ச்­சி அடைய வைத்தது.

இவ்­வாண்டு ஏப்­ரல் 15ஆம் ேததி­அன்று கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட விவேக் இரு நாள்­களில் உயி­ரி­ழந்­தார்.

நடி­கர் விவேக்­கின் இந்த திடீர் மர­ணம் மக்­கள் மத்­தி­யில் பெரும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

அவர் தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­தால்­தான் இந்த உயிரிழப்பு விப­ரீ­தம் நடந்­துள்­ளது என மக்­கள் மத்­தி­யில் தகவல் பரவி பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

இத­னி­டையே கொரோனா தடுப்­பூசி செலுத்­திக்­கொண்­ட­தால் நடி­கர் விவேக் மர­ண­ம­டைந்­த­தா­கக் கூறி விழுப்­பு­ரத்­தைச் சேர்ந்த சமூக ஆர்­வ­லர் சர­வ­ணன் என்­ப­வர் தேசிய மனித உரிமை ஆணை­யத்­தில் புகார் மனு ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்­தி­ருந்­தார்.

இந்­தப் புகாரை ஏற்று தேசிய மனித உரிமை ஆணை­யம் விசா­ரணை நடத்தி வந்­தது. இந்த விசா­ரணை முடி­வில் விவேக் மர­ணத்­திற்­கும் கொரோனா தடுப்­பூ­சிக்­கும் தொடர்பு இல்லை என தெரி­ய­வந்­துள்­ளது. அவர் உயர் ரத்த அழுத்­தத்­தால்­ மார­டைப்பு ஏற்­பட்டு இறந்­துள்­ள­தாக தடுப்­பூசி குறித்து ஆய்வு செய்­யும் மத்­திய அர­சின் குழு விளக்­கம் அளித்­துள்­ளது.