திருநள்ளாறில் 144 தடை உத்தரவு பிறப்பித்த ஆட்சியர்

1 mins read
d86eba4d-0b39-49ff-971c-77282e5bafaa
-

காரைக்­கால்: காரைக்­கால் மாவட்ட பாமக செய­லா­ள­ரா­கப் பொறுப்பு வகித்து வந்த தேவ­மணி, 53, என்­ப­வர் சந்­தேகப் பேர்வழிகளால் கொல்­லப்­பட்­டார்.

திரு­நள்­ளாறு அருகே வசித்து வந்த தேவ­மணி, அங்­குள்ள சனி பக­வான் கோவில் பக்­கத்­தில் இருக்­கும் தனது கட்சி அலு­வ­ல­கத்­தில் இருந்து நேற்று முன்­தினம் இரவு ஆத­ர­வா­ளர் ஒரு­வ­ரின் மோட்­டார் சைக்­கி­ளில் வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்தபோது சிலர் அவரை கடுைமயாகத் தாக்கிய தில் உயிரிழந்தார்.

இந்நிலையில், திரு­நள்­ளாறு பகு­தி­யில் எந்­த­வொரு பதற்­ற­மும் கல­வ­ர­மும் ஏற்­ப­டா­மல் தடுக்­கும் வகை­யில் 144 தடை உத்­த­ரவு பிறப்­பித்து காரைக்­கால் மாவட்ட ஆட்­சி­யர் அர்­ஜுன் ஷர்மா உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளார்.

தேவ­ம­ணி­யின் உடல் காரைக்­கால் அரசு தலைமை மருத்­து­வ­மனை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதையடுத்து இந்த மருத்துவமனை இருக்கும் இடம், தேவ­மணி வீடு உள்­ளிட்ட பகு­தி­களில் பலத்த போலிஸ் பாது­காப்­பு போடப்­பட்டிருந்தது.

இந்தக் கொலைச் சம்பவம் கு­றித்து திரு­நள்­ளாறு போலிசார் வழக்குப் பதிந்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.