பிரியாணிக்கு ஆசைப்பட்டு குற்றவாளிகளுக்கு சலுகை

பிரியாணிக்கு ஆசைப்பட்டு குற்றவாளிகளுக்கு சலுகை

1 mins read
6b2e2326-71f0-4a31-8177-5ec5f8b4456d
-

சேலம்: பொள்­ளாச்சி பாலி­யல் வழக்­கில் சம்­பந்­தப்­பட்­டி­ருந்த கைதி­களை அவர்­க­ளது உற­வி­னர்­க­ளு­டன் பேச சலுகை காட்­டிய விவ காரம் தொடர்­பாக கடந்த புதன்­கிழமை இரவு ஏழு போலி­சார் பணி இடை­நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர்.

இதைத்­தொ­டர்ந்து, அவர்­க­ளி­டம் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யில், இறைச்சிப் பிரி­யா­ணிக்கு ஆசைப் பட்டு காவல் வாக­னத்தை நிறுத்தி கைதி­களை உற­வி­னர்­க­ளி­டம் பேச அனு­ம­தித்­தது தெரி­ய­வந்­தது.

கோவை நீதி­மன்­றத்­தில் வைத்து கைதி­க­ளுக்கு உணவு கொடுக்க வேண்­டும் என போலி­சா­ரி­டம் உற­வி­னர்­கள் அனு­மதி கேட்­டுள்­ள­னர். "நீங்­களும் பசி­யாக இருப்­பீர்­கள், அனை­வ­ருக்­கும் வீட்டில் இருந்து இறைச்சிப் பிரி­யாணி சமைத்து வந்­துள்­ளோம்," என போலி­சா­ரி­டம் உற­வி­னர்­கள் கூறி­னர்.

நீதி­மன்­றத்­தில் வைத்து எந்­த­ஒரு பொரு­ளும் வாங்­கக்­கூ­டாது என போலி­சார் கூறி­னர். இதை யடுத்து, கைதி­களை கோவை நீதி­மன்­றத்­தில் முன்­னிை­லப்­ப­டுத்தி­விட்டு மீண்­டும் சேலம் மத்­திய சிறைக்கு அழைத்­துச் சென்று கொண்­டி­ருந்­த­போது பின்­தொடர்ந்து வந்த உற­வி­னர்­கள் காவல் வாக­னத்தை நிறுத்தி பிரி­யா­ணி­யைக் கொடுத்­து­விட்­டுச் சென்­றுள்­ள­னர்.