விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சத்யா என்ற பெண்ணுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தபோது, பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயரைப் பதிய தாதியர்கள் விவரம் கேட்டனர்.
அப்போது, கணவர் தன்னை காதலித்து ஏமாற்றிய கதையை சத்யா கூறினார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேல்முருகன், 36, சத்யா, 27.இவர்கள் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வேல்முருகன் சத்யாவை ஏமாற்றி உள்ளார்.
இதுகுறித்து ஊ.மங்கலம் போலிசாருக்குத் தெரியப்படுத்தி யதை அடுத்து, தனது தவற்றை ஒப்புக்கொண்டு சத்யாவை திருமணம் செய்துகொள்வதாக வேல்முருகன் உறுதியளித்தார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் முக்கியமானவர்கள் முன்னிலையில், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் சன்னிதியில் குழந்தையின் முன் தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர்.