50,000 இடங்களில் நடந்த ஆறாம் கட்ட தடுப்பூசி முகாமுக்கு ஏராளமானோர் திரண்டனர் அசைவம் சாப்பிடுபவர்கள், மது அருந்துவோருக்கு முன்னுரிமை

50,000 இடங்களில் நடந்த ஆறாம் கட்ட தடுப்பூசி முகாமுக்கு ஏராளமானோர் திரண்டனர் அசைவம் சாப்பிடுபவர்கள், மது அருந்துவோருக்கு முன்னுரிமை

2 mins read
45674812-8734-463b-b0ad-26ab6449766f
சென்னையில் வீடு வீடாகச் சென்று சுகாதார ஊழியர்கள் கோவேக்சின் தடுப்பூசியைப் போட்டுவிட்டனர். படம்: ஏஎஃப்பி -

சென்னை: தமி­ழ­கத்­தில் 50,000 இடங்­களில் நேற்று நடை­பெற்ற ஆறாம் கட்ட கொவிட்-19 தடுப்­பூசி முகா­மில் ஏரா­ள­மான மக்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு பயன் அடைந்­த­தாக மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

வழக்­க­மாக ஞாயிற்­றுக்­கி­ழமை களில் நடை­பெ­றும் இம்­மு­காம், மதுப்­பி­ரி­யர்­கள், அசை­வப் பிரி­யர் களுக்கு முன்­னு­ரிமை அளிக்­கும் வகை­யில் சனிக்­கி­ழ­மை­யான நேற்று நடத்­தப்­பட்­ட­தாக மக்­கள் நல் வாழ்­வுத் துறை செய­லா­ளர் டாக்­டர் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­தார்.

மது அருந்­து­ப­வர்­களும் மாமி­சம் சாப்­பி­டு­ப­வர்­களும் வார இறுதி நாளான ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தால் உயி­ருக்கு ஆபத்து ஏற்­ப­ட­லாம் என்ற தவ­றான வதந்தி பரவி வரு­வ­தால், இந்த இரு­சா­ரா­ருக்­கும் முக்­கி­யத்­து­வம் தரும் வகை­யில் நேற்றைய தினத்தில் தடுப்­பூசி போடு­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­ததா­க­வும் ராதா­கி­ருஷ்­ணன் மேலும் கூறி­னார்.

''இரண்டாம் தவணை தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் இன்­னும் 57 லட்­சம் பேர் உள்­ள­னர். அவர்­க­ளது வீடு­க­ளுக்கே சென்று தடுப்­பூசி போடப்­படும்,'' என்று சுகா­தா­ரத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­னார்.

பாலர் பள்­ளி­கள் திறப்பு இல்லை

இதற்­கி­டையே மழ­லை­யர், நர்­சரி பள்­ளி­கள் திறப்பு தற்­போ­தைக்கு இல்லை என்று அரசு அர­சாணை வெளி­யிட்­டுள்­ளது. இது­கு­றித்து, செய்­தி­யா­ளர்­களிடம் அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி கூறு­கை­யில், "கிருமிப்பரவல் இன்­னும் முழு­மை­யாக ஒரு கட்­டுக்­குள் வர­வில்லை. அத்­து­டன், கொரோனா மூன்­றாம் அலை­யால் குழந்­தை­கள் பாதிக்­கப்­ப­ட­லாம் என்ற எச்­ச­ரிக்­ கை­யும் உள்ள­தால் பள்­ளி­கள் திறப்­பில் பள்­ளிக் கல்­வித்­துறை அதிக எச்­ச­ரிக்­கை­யுடன் செயல்­பட்டு வரு­கிறது," என்று கூறி­னார்.

'வராது என கூறமுடியாது'

"மாநி­லத்­தில் இது­வரை மூன்­றா­வது அலைக்­கான அறி­குறி இல்லை. ஆனால், இந்த அலை வராது என உறு­தி­யா­கக் கூறமுடி­யாது. வெளி­நா­டு­கள், வெளி­மா­நி­லங்­கள் சில­வற்­றில் மூன்­றா­வது அலை ஏற்­பட்­டுள்­ளது," என ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.