சேலம்: சேலம் மாவட்டம், புத்திரகவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஆா்.இளங்கோவனுக்குச் சொந்தமான 36 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலிசார் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, பணம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தந்தி தொலைக்காட்சி செய்தி தெரிவித்தது.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவனின் சேலம் வீடு உள்ளிட்ட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலிசார் நடத்திய சோதனையில் இதுவரை 29 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 10 சொகுசு கார்கள், இரண்டு வால்வோ சொகுசு பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், 2,650 சவரன் தங்க நகைகள், 282 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.68 லட்சம் மதிப்புள்ள வைப்புத்தொகை ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், ெசன்னை, நாமக்கல், திருச்சி, கரூா், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 36 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழக முன்னாள் முதல்வா் பழனிசாமியின் நெருங்கிய நண்பராக விளங்கும் இவர், சேலம் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேர வைச் செயலராகவும் உள்ளாா்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக இவர் மீதும் இவரது மகன் பிரவீன்குமாா் மீதும் லஞ்ச ஒழிப்புப் போலிசார் வழக்குப் பதிந்து சோதனையை நடத்தி இந்த விவரங்களைத் தெரிவித் துள்ளனர்.
இதற்கிடையே, "லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்ற பெயரில் அதிமுகவின் தொண்டர்களைத் திமுக அரசு தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகிறது.
"தனது பழிவாங்கும் நடவடிக்கைகளை இடைவிடாது தொடர்ந்து வரும் திமுகவின் செயல் கடும் கண்டனத்திற்கு உரியது," என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

