தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை 7,800 பேர் கண்காணிப்பு: ஓடவோ ஒளியவோ முடியாது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை 7,800 பேர் கண்காணிப்பு: ஓடவோ ஒளியவோ முடியாது

2 mins read
490025e6-baaf-4a26-ac5f-7201c40c3ea8
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.புத்தாடைகள், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். படம்: இபிஏ -

சென்னை: தலை­ந­கர் சென்­னை­யில் 7,800 குற்­ற­வா­ளி­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­னர். அவர்­ க­ளின் நட­வ­டிக்­கை­களை அணுக்­க­மா­கத் தொடர்ந்து கண்­கா­ணித்து வருகிறோம் என்று சென்னை மாந­க­ரக் காவல் ஆணை­யர் சங்­கர் ஜிவால் தெரி­வித்­துள்­ளார்.

"குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்டு விட்டு எங்­கள் பிடி­யில் இருந்து அவர்­கள் எங்­கும் தப்­பித்து ஓடவோ ஒளி­யவோ முடி­யாது," என்­றும் அவர் மேலும் கூறி­யுள்­ளார்.

தீபா­வ­ளித் திரு­நாள் அடுத்த மாதம் 4ஆம் தேதி கொண்­டா­டப்­பட உள்ள நிலை­யில், மக்­கள் தங்க ளுக்­குத் தேவை­யான புத்­தா­டை­கள், மளிகைச் சாமான்­கள், வீட்டு உபயோகப் பொருட்­களை வாங்­கு­வ­தற்காக கடை வீதி­களில் குவிந்து வரு­கின்­ற­னர்.

இந்­தப் பண்­டிகை கால கூட்ட நெரி­ச­லைத் தங்­க­ளுக்கு சாதக மாகப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு சங்­கி­லிப் பறிப்பு, பணப்­பையைப் பறித்­துச் செல்­வது, கைபே­சியைத் திரு­டு­வது உள்­ளிட்ட குற்­றச்­­செயல் களில் ஈடு­ப­டு­வ­தற்­கா­கக் காத்தி ருக்­கும் 7,800 குற்­ற­வா­ளி­கள் அடை யாளம் காணப்­பட்­டுள்­ள­னர்.

இவர்­கள் தங்­க­ளது கைவ­ரிசை யைக் காட்­டு­வ­தற்கு முன்பே, அவர்­களை மடக்­கிப் பிடிக்க நவீன தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்து வதற்­குப் போலி­சார் முடுக்கிவிடப்­பட்­டுள்­ள­னர்.

ஏறக்குறைய 6,000 போலிசார் இந்த பண்டிகை கால பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதுகுறித்து, காவல் ஆணையா் சங்கா் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை அடுத்து முக்கிய கடை வீதிகளில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

"பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயா் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. 'பைனாகுலா்', 'ட்ரோன்' கேமராக்கள் மூலமாகவும் குற்றச்சம்பவங்கள் நிகழாமல் கண்காணிக்கப்படுகிறது.

"பேஸ் டிடெக்‌ஷன்' மென்பொருள் மூலம் அதிநவீன தொழில்நுட்ப உதவியைக் கொண்டு சென்னையில் 7,800 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களின் நடவடிக்கைகளையும் கண்கா ணித்து வருகிறோம். குற்றவாளிகள் இதற்கு மேலும் அத்துமீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

"அத்துடன், ஆங்காங்கே ஏராளமான போலிசார் நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் குற்றவாளிகள் உடனுக்குடன் பிடிபடுவார்கள்," என்று கூறினார்.