சென்னை: தேமுதிக தொண்டர்கள் கட்சிவிட்டு கட்சி தாவுவது எனக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கட்சிக்கும் செய்யும் துரோகமாகக் கருதுகிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
"கடந்த பல ஆண்டுகளாக பெரும் சிரமப்பட்டு வளர்த்துள்ள இந்தக் கட்சியை விட்டுச்செல்பவர்கள் 'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்பதை வெகு விரை விலேயே உணர்ந்துகொள்வார்கள்," என்றார் அவர்.
தேமுதிகவின் நிர்வாகிகள் பலரும் மற்ற கட்சிகளில் இணையும் போக்கு அதிகரித்துவருவதை கண்டித்துள்ள விஜயகாந்த், "மூளைச்சலவை செய்வோரின் பேச்சையும் ஆசை வார்த்தைகளையும் நம்பி தேமுதிகவை பாதி யிலேயே கைவிட்டுச்செல்வது கட்சிக்குச் செய்யும் நம்பிக்கைத் துரோகம்," எனவும் வருத்தம் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், "எனது உடல்நிலை பாதிக்கப்பட்டு, கட்சிப் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான். அதற்காக தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என நினைப்பது தவறானது.
"இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்கமுடியாது. இக்கழகம் அசைக்கமுடியாத மாபெரும் விருட்சமாய் வேரூன்றி நிற்கும். தேமுதிக வளர்ச்சிப்பாதையை நோக்கிச் செல்வதற்கு தொண்டர்கள் அனைவரும் உறுதுணையாக இருந்து ஒத்துழைக்கவேண்டும்.
"உண்மை, உழைப்பு, நேர்மையை நம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம். அதிகார பலம், பணபலம் ஆகியவற்றை மீறி தேர்தலில் நின்றோம். வெற்றி, தோல்வி சகஜம். நமக்கான காலம் நிச்சயம் வரும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

