கொரோனா ஒழியவேண்டும் என்றால் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக நலன், மகளிர் உரிமைத் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கொவிட்-19 கிருமி பாதிப்பால் பெற்றோரை இழந்த 62 குழந்தைகளுக்கு ரூ.1.86 கோடி நிதியுதவிக் கான காசோலைகளை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
பொதுமக்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். பல்வேறு நாடுகளில் கரோனா மூன்றாவது அலை பரவிக் கொண்டுள்ளது என்றார் அவர்.

