வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியக்குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் திமுகவைச் சேர்ந்த வள்ளிமலை வேல்முருகன் (படம்: ஊடகம்).
இவரது சொத்து விவரங்கள் கேட்பவர்களை மலைக்கவைக்கின்றன. அவரிடம் கிலோ கணக்கில் தங்கம் இருப்பதாகவும் ரூ.22 கோடிக்கு சொத்துகள் இருப்பதாகவும் உள்ளாட்சித் தேர்தலின்போது தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திமுகவில் எந்த ஒரு முக்கிய பொறுப்பிலும் இல்லாத வேல்முருகன் தலைவராகியிருப்பதுதான் இதர திமுகவினரிடம் சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
கழுத்தில் கொத்துகொத்தாக கிலோ கணக்கில் ெதாங்கும் தங்கச் சங்கிலிகள், உருளை போன்ற கைக்காப்புகளையும் அணிந்துகொண்டு நடமாடும் நகைக்கடையாக வலம் வருவதில் வேல்முருகனுக்கு அலாதிப் பிரியமாம்.
"பெங்களுரில் 500 லாரிகளை வைத்து தொழில் செய்துவரும் வேல்முருகன், மாதத்தில் சில நாட்கள் மட்டுமே காட்பாடிக்கு வருகிறார்.
"இப்படிப்பட்ட ஒருவரைத்தான் காட்பாடி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் பதவிக்கு நிறுத்தி வெற்றிபெற வைத்துள்ளனர். காட்பாடியிலேயே வாழ்ந்து, திமுகவின் போராட்டங்களில் பங்கேற்று சிறைக்குச் சென்ற ஒரு திமுக நிர்வாகிகூட அமைச்சர் துரைமுருகன் கண்ணுக்குப் படவில்லை," என்று காட்பாடி திமுக நிர்வாகிகள் சிலர் வசை பாடியுள்ளனர்.