சேலம்: பண மோசடி புகாரின் பேரில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளரான மணி கைதாகி உள்ளார்.
45 வயதான இவர், அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வசூலித்து, வேலை பெற்றுத் தராமல், பணத்தையும் திருப்பி அளிக்காமல் மோசடி செய்தார் என்பது குற்றச்சாட்டு.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் தமக்கு உதவி பொறியியலாளர் பணி வாங்கித் தருவதற்காக மணி, ரூ.17 லட்சம் பெற்றுக்கொண்டு தம்மை ஏமாற்றியதாக கடலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர், சேலம் காவல்துறையில் அண்மையில் புகார் அளித்தார்.
அதன் பேரில் மணி உட்பட இருவர் மீது வழக்குப் பதிவானது. இதேபோல் அதிமுக நிர்வாகி ஒருவரிடமும் மணி ரூ.77 லட்சம் பெற்று ஏமாற்றியதாக ஏற்கெனவே போலிசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் முதல்வரின் உதவியாளராக பத்து ஆண்டுகள் பணியாற்றிய மணி தலைமறைவானது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

