முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் தொடக்கம்; நடிகர் சூர்யா காெணாளி வெளியீடு கல்விப் புரட்சிக்கு வித்திடும் 'இல்லம் தேடி கல்வி' திட்டம்

முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் தொடக்கம்; நடிகர் சூர்யா காெணாளி வெளியீடு கல்விப் புரட்சிக்கு வித்திடும் 'இல்லம் தேடி கல்வி' திட்டம்

2 mins read
f9fbe3b0-55b5-4524-adeb-eaf098a30424
முதலியார்குப்பத்தில் 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தைத் தொடங்கி வைத்து, வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆசிரியை பாடம் நடத்து வதை தரையில் அமர்ந்து கவனித்தார் முதல்வர். படம்: ஊடகம் -

விழுப்­பு­ரம்: பள்­ளிக்கல்­வித் துறை­யால் தொடங்கப்பட்டுள்ள 'இல்­லம் தேடி கல்வி'த் திட்­டம் மிகப்­பெ­ரிய கல்­விப்­பு­ரட்­சிக்கு, மறு­ம­லர்ச்­சிக்கு வித்­தி­டும் என்று முதல்­வர் மு.க ஸ்டா­லின் குறிப்­பிட்­டுள்­ளார்.

தமி­ழ­கத்­தில் விழுப்­பு­ரம், கன்னி யாகு­மரி உள்­ளிட்ட 12 மாவட்­டங் களில் இத்­திட்­டம் முதல்­கட்­ட­மாக தொடங்கி வைக்­கப்­பட்­டது.

விழுப்­பு­ரம் மாவட்­டம், முத­லி­யார் குப்­பம் கிரா­மத்­தில் புதன்­கிழமை மாலை இத்­திட்­டத்­தைத் தொடங்கிவைத்துப் பேசிய முதல்­வர், "கல்­வி­யின் மிக்­க­தாம் செல்­வ­மொன்று இல்­லையே, கண்­மணி கேளடா நீ என்­றன் சொல்­லையே! செல்­வம் பிறக்­கும் நாம் தந்­தி­டில் தீர்ந்­தி­டும் கல்வி தருந்­தொ­றும் மிகச் ­சேர்ந்­தி­டும்" என்று பாடி­னார் பாவேந்­தர் பார­தி­தா­சன். அவ­ரது பாட­லுக்கு ஏற்ப பள்­ளிக்­கல்­வித்­துறை செயல்பட்டுள்ளது.

"இல்­லம் தேடி கல்­வித் திட்­டத்­தின் மூலம் லட்­சக்­க­ணக்­கான மாணவ, மாண­வி­க­ளின் வாழ்­வில் ஒளி­யேற்ற அடிக்­கல் நாட்­டப்­பட்­டுள்­ளது. இதன்­மூ­லம், நூற்­றாண்டு காலத்­திற்கு அறி­வி­ன் வெளிச்­சம் சுடர்விட உள்ளது," என்றார்.

இத்­திட்­டத்தைத் தொடங்க கார­ண­மாக இருந்த கல்வி அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி யையும் பாராட்­டிய முதல்வர், "கொரோனா ஊர­டங்கு கட்­டுப்­பாடு­கள் கார­ண­மாக பள்­ளி­கள் மூடப்­பட்­ட­தால் மாணவர்களின் கற்­ற­லில் இடை­வெ­ளி ஏற்­பட்­டுள்­ளது. இத­னைச் சரி­செய்யவே 'இல்­லம் தேடி கல்வி'த் திட்­டம் செயல் பாட்டுக்கு வந்துள்ளது.

"இத்­திட்­டத்­திற்­காக ரூ.200 கோடி நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ள நிலையில், தன்­னார்­வலர்­களைக் கொண்டு பள்ளி மாண­வர்­க­ளுக்கு மாலை ஒரு மணி நே­ரம் ஆடல், பாடல், நாட­கம், பொம்­ம­லாட்­டம் போன்­றவை மூலம் புது­மை­யான முறை­யில் பாடம் கற்பிக்கப்படும்," என முதல்வர் கூறியுள்ளதாக 'தினமணி' ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.

"இனிது, இனிது கற்­றல் இனிது. நம் மாண­வர்­க­ளோட கற்­றல் இடை­வெ­ளியைக் குறைக்க 'இல்­லம் தேடிக் கல்வி' என்ற அரு­மை­யான திட்­டத்தை தமி­ழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அனைத்து குழந்­தை­களும் பயன்­பெற பெற்­றோ­ரும் ஊர்­மக்­களும் ஊக்­குவிப்­போம், உறுதி செய்­வோம்," என விழிப்­பு­ணர்வு காெணாளி ஒன்றை நடி­கர் சூர்யா வெளி­யிட்­டுள்­ளார்.