ராமேஸ்வரம்: நளினமாக சேலை அணிந்து, அதன் மேல் சட்டையைப் போட்டுக்கொண்டு திருமதி லட்சுமி முருகேசன் கடல் நீருக்குள் குதித்து மரங்களை விடவும் அதிக அளவில் கரியமில வாயுவை உறிஞ்சும் அதிசய பயிர் என்று விஞ்ஞானிகளால் பாராட்டப்படும் கடற்பாசியைச் சேகரித்து வருகிறார்.
சீனா, அமெரிக்காவிற்கு அடுத்த படியாக உலகின் மூன்றாவது பெரிய கரியமில வாயுவால் மாசுபடும் நாடாக இந்தியா உள்ளது.
கடல்பாசி கரியமில வாயுவை அதிகமாக உறிஞ்சி உயிர்வாயுவை அதிகமாகக் ெகாடுக்கிறது. இதனால், மனிதர்கள், மீன்களுக்கு நன்ைம பயக்கிறது.
இந்த கடற்பாசி வளர்ப்பினால் கடல் அமிலமயமாவதை மாற்றவும் கடல் சூழலை மேம்படுத்தவும் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை வழங்கவும் எவ்வாறு உதவலாம் என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
"நான் என் குழந்தைகளுக்காக இந்த கடின உழைப்பில் ஈடுபடு கிறேன். எனது நான்கு மாத உழைப்பின் மூலம் என்னால் நல்ல லாபம் பார்க்கமுடிகிறது," என்று சொல்லும் திருமதி முருகேசன், ஒவ்வொரு மாதமும் கடல்பாசி சேக ரிப்பில் ரூ.20,000 (S$359) சம்பாதிப்பதாகச் சொல்கிறார்.
"இதனால் என் குழந்தைகளைக் கல்லூரிக்கு அனுப்பமுடிகிறது," என்றும் அவர் மேலும் கூறினார்.
"கடல்பாசி பல வழிகளிலும் ஓர் அதிசய பயிராக விளங்குகிறது. இதற்கு நிலம், நன்னீர், உரம், பூச்சிக்கொல்லி மருந்து தேவையில்லை.
"இது கரியமிலவாயுவை மரங்களை விடவும் ஐந்து மடங்கு அதிகம் உறிஞ்சி உயிர்வாயுவை வெளியிடுகிறது," என்று அரசு கடல்சார் விஞ்ஞானி டாக்டர் எம்.கணேசன் ஏஎஃப்பி ஊடகத்திடம் கூறினார்.
8,000 கி.மீ. கடற்கரையைக் கொண்ட இந்தியா, தற்போதைய கடல்பாசி உற்பத்தியை 30,000 டன்களில் இருந்து 2025ஆம் ஆண்டிற்குள் ஒரு மில்லியன் டன்னாக உயர்த்த இலக்கு கொண்டுள்ளது.
அக்வாக்ரியின் நிர்வாக இயக்குநர் அபிராம் சேத் ஏஎஃப்பி ஊடகத்திடம் கூறுகையில்,"கடற்பாசிகள் தண்ணீரைச் சுத்தப்படுத்துகின்றன. அதேநேரத்தில் கடற்பாசி பயிரிடுபவர்கள் வேலை தேடுவதற்காக நகர்ப்புறங்களுக்கு இடம்பெயராமல் நிலையான வருமானத்தைப் பெறுகிறார்கள்," என்றார்.
கடல்பாசி விவசாயி விஜயா கூறுகையில், "நாங்கள் கடலில் நிறைய ஆபத்துகளை எதிர்கொள்கிறோம், ஆனால் இந்த வேலை எனக்கும் எனது குடும்பத்திற்கும் நல்ல ஒரு கௌரவத்தை அளித்துள்ளது," என்றவர், "எங்கள் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது, இப்போது எனது கிராமத்தில் உள்ள மற்றவர்களும் கடற்பாசி விவசாயிகளாக மாற விரும்புகிறார்கள்." என்றார்.

