அரசியல் ஆட்டத்தைத் தொடர விஜய் மக்கள் இயக்கம் முடிவு

அரசியல் ஆட்டத்தைத் தொடர விஜய் மக்கள் இயக்கம் முடிவு

1 mins read
2505e84a-7178-446a-a7c6-2d51197bef0b
-

சென்னை: உள்­ளாட்­சித் தேர்­த­லில் ஓர­ளவு கணி­ச­மான இடங்­களில் வெற்றிபெற்­றுள்ள விஜய் மக்­கள் இயக்­கம், அடுத்­த­தாக விரை­வில் நடக்க உள்ள நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லி­லும் கள­மி­றங்க உள்­ள­தாக கூறியுள்ளது.

ஒன்­பது மாவட்­டங்­களில் நடந்த ஊரக உள்­ளாட்­சித் தேர்­த­லில் விஜய் மக்­கள் இயக்­கத்­தைச் சேர்ந்த 129 விஜய் ரசி­கர்­கள் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்­ற­னர். அவர்­களை அண்­மை­யில் சந்­தித்­துப் பேசிய விஜய், "மக்­க­ளுக்­குத் தொடர்ந்து நல்­லது செய்து, மக்­க­ளின் நன்­ம­திப்­பைப் பெறுங்­கள்," என அறி­வு­றுத்­தி­னார்.

தேர்­த­லில் வெற்றிபெற்­ற­வர்­களின் விவரங்­களை அதி­கா­ர­பூர்­வ­மாக வெளி­யிட்­டுள்ள மக்­கள் இயக்­கப் பொறுப்­பா­ளர் புஸ்ஸி ஆனந்த், "தமி­ழக மக்­க­ளின் அடிப்­படை பிரச்­சி­னைை­யத் தீர்க்க, அதை மத்­திய-மாநில அர­சு­களின் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லு­மாறு விஜய் கூறி­யி­ருக்­கி­றார். அதன்­படி, மக்­கள் பணி­களைத் தொடர்­வோம்," என்­றார்.