தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை மையம்

தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை மையம்

1 mins read
575a48f6-41a9-48e7-922f-c9ff1ec0f341
-

கன்னியாகுமரி: தமிழ்­நாட்­டில் இன்று முதல் நவம்­பர் 1ஆம் தேதி வரை பல்­வேறு மாவட்­டங்­க­ளி­லும் பர­வ­லாக மித­மான மழை­யும் ஒரு சில இடங்­களில் அதீத கன­மழை­யும் பெய்­யும் என்று இந்­திய வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

இத­னால் தமி­ழ­கத்­தில் அடுத்த மூன்று நாள்க­ளுக்கு ஆரஞ்சு எச்­ச­ரிக்கை விடுக்­கப்பட்­டுள்­ளது. தென்­மேற்கு வங்­கக் கட­லி­ல் நில­வும் குறைந்த காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகுதி கார­ண­மாக கன்­னி­யா­கு­மரி, திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி, ராம­நா­த­பு­ரம் ஆகிய மாவட்­டங்­களில் அதீத கன­ம­ழை­ பெய்­யக்­கூ­டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கன­மழை காரணமாக நேற்று தமி­ழ­கத்­தின் எட்டு மாவட்­டங்­களில் பள்­ளி­க­ளுக்கு விடு­முறை அறி­விக்­கப்­பட்டிருந்தது.