ஒரேநாளில் ஏழு நெருப்புக் கோழிகள் உயிரிழப்பு

1 mins read
393a5279-93c6-49bf-8010-804e45321b08
-

வண்­ட­லூர்: சென்­னையை அடுத்த வண்­ட­லூ­ரில் உள்ள அறி­ஞர் அண்ணா உயி­ரி­யல் பூங்­கா­வில் கடந்த 26ஆம் தேதி­யன்று கவிதா என்ற 19 வயது பெண் சிங்­கம் உடல் நலக் குறைவால் உயி­ரி­ழந்­த­தைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் ஒரே நாளில் ஏழு நெருப்­புக் கோழி­கள் உயி­ரி­ழந்­துள்­ளன. இதை­ய­டுத்து, மீதம் உள்ள நெருப்­புக்கோழி­களை வண்­ட­லூர் பூங்கா நிர்­வா­கி­களும் மருத்­து­வர்­களும் தொடர்ந்து கண்­கா­ணித்து வரு­கின்­ற­னர்.

பிரே­தப் பரி­சோ­தனை முடி­வு­கள் வந்­த­பி­றகே எத­னால் நெருப்­புக்­கோ­ழி­கள் உயி­ரி­ழந்­தன என்­பது முழு­மை­யா­கத் தெரி­ய­வ­ரும். ரத்த மாதி­ரி­கள், உடல் உறுப்­பு­கள் ஆய்­வின்­போது கால­ரா­வால் அவை பாதிக்­கப்­ப­ட­வில்லை என்­பது தெரி­ய­வந்­தது.