வெடி வெடிப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது சுகாதாரத் துறை ரயில்களில் பட்டாசு எடுத்துச் சென்றால் சிறை, அபராதம்

சென்னை: தீபா­வ­ளிக்கு இன்­னும் நான்கு தினங்­களே உள்ள நிலை­யில், ரயில் பய­ணி­கள் தங்­க­ளு­டன் பட்­டா­சு­களை எடுத்­துச்­செல்­வ­தற்கு மத்­திய ரயில்வே நிர்­வா­கம் தடை விதித்­துள்­ளது.

இதை­யும் மீறி, பட்­டா­சு­களை எடுத்­துச்­சென்­றால் ரூ.1,000 அபரா தமும் மூன்று ஆண்­டு­கள் சிறைத்­தண்­ட­னை­யும் அனு­ப­விக்க நேரி­டும் என்­றும் அது எச்­ச­ரித்­துள்­ளது.

இதைத்­தொ­டர்ந்து, ரயில் நிலை­யங்­க­ளின் அனைத்து நுழை­வா­யில்­க­ளி­லும் 'மெட்­டல் டிடக்­டர்' உத­வி­யு­டன் பய­ணி­க­ளின் உைட­மை­க­ளைச் சோதிக்­கும் பணி­யில் ரயில்வே போலி­சார் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

வரும் நவம்­பர் 4ஆம் தேதி தீபா­வ­ளிப் பண்­டிகை கொண்­டா­டப்­பட உள்­ள­தால், தமி­ழ­கம் எங்­கும் புத்­தா­டை­கள், பட்­டா­சு­கள், பல­கா­ரங்­கள் வாங்க மக்­கள் கடை­வீ­தி­களில் குவிந்து வரு­கின்­ற­னர்.

இத­னால், கடந்த 24ஆம் தேதி முதல் சென்னை ரயில்­களில் கூட்­டம் அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து, இப்­போது முதல் நவம்­பர் 5ஆம் தேதி­வரை சென்னை புற­ந­கர் மின்­சார ரயில்­க­ளி­லும் விழுப்­பு­ரம், அரக்­கோ­ணம், கும்­மி­டிப்­பூண்­டிக்கு இயக்­கப்­படும் விரைவு ரயில்­க­ளி­லும் கூடு­தல் பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

வெளி­யூர், வெளி­மா­நி­லங் களுக்­குச் செல்­லும் ரயில் பய­ணி­கள் பட்­டா­சு­களை எடுத்­துச்­செல்ல அதி­க வாய்ப்பு இருப்­ப­தால், ரயில் நிலை­யங்­களில் 24 மணி நேர­மும் ரயில்வே பாது­காப்­புப் படை­யி­னர் தீவிர சோதனை நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், பட்­டாசு வெடிப்­ப­தற்­கான வழி­காட்டி நெறி முறை­களை வெளி­யிட்­டுள்ள தமி­ழக சுகா­தார அமைச்சு, பட்­டாசு வெடிக்­கும் முன்பு எந்­த­வொரு கிரு­மி­நா­சி­னி­யை­யும் பயன்­ப­டுத்த­வேண்­டாம் என கூறியுள்­ளது.

"காலணி அணிந்து திறந்த வெளி­யில் பட்­டா­சு­களை வெடிக்­க­லாம். மின்­கம்­பங்­கள் அருகே வெடிக்­கக்­கூ­டாது. முழு­மை­யாக வெடிக்­காத பட்­டா­சு­கள் மீது தண்­ணீர் ஊற்றி அணைக்கவேண்­டும்.

"பட்­டாசு வெடித்த பின்பு கைக­ளைக் கழு­வ­வேண்­டும்," என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்­கி­டையே, பண்­டி­கைக் காலங்­களில் வணிக வளா­கம், அங்­கா­டி­களில் பொது­மக்­கள் அதி­கம் கூடு­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என வலி­யு­றுத்­தி­யுள்ள சென்னை மாந­க­ராட்சி, கொரோனா விதி­மு­றையை மீறிய கடை­கள், தனி­ந­பர்­க­ளி­டம் இருந்து கடந்த மே மாதம் முதல் இம்­மா­தம் 25ஆம் தேதி வரை ரூ.4 கோடியே 93 லட்சம் ரூபாய் அப­ரா­தம் வசூ­லித்­துள்­ள­தாக சென்னை மாந­க­ராட்சி தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!