குறை கூறிய பெண்ணுடன் உணவு சாப்பிட்ட அமைச்சர்

மாமல்­ல­பு­ரம்: செங்­கல்­பட்டு மாவட்­டம், மாமல்­ல­பு­ரத்­தில் அமைந்­தி­ருக்­கும் ஸ்த­ல­ச­ய­னப் பெரு­மாள் கோவி­லில் அர­சின் அன்­ன­தான திட்­டத்­தின்­படி தின­மும் அன்­ன­தா­னம் வழங்­கப்­பட்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், அங்கு உணவு சாப்­பி­டச் சென்ற பழங்­கு­டி­யின நரிக்­கு­ற­வப் பெண் ஒரு­வர், தன்னை அனை­வ­ரு­ட­னும் சேர்ந்து உணவு சாப்­பிடவிடாமல் அவ­மதித்து­விட்­ட­னர் என்று சமூக வலைத்­தளங்­களில் காணொளி ஒன்றை வெளி­யிட்­டார்.

இந்தக் காணொளி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்ததை அடுத்து, அவ­மானப்­படுத்­தப்­பட்­ட­தாக முறை­யிட்ட பெண் உள்­ளிட்ட பொது­மக்­க­ளு­டன் அமர்ந்து அமைச்­சர் பி.கே. சேகர்­பாபு உணவு சாப்­பிட்­டார். பின்­னர் அவர்­க­ளுக்­குத் தீபா­வளி திரு­நாளை முன்­னிட்டு வேட்டி சேலை­க­ளை­யும் வழங்­கி­னார். "திருக்­கோ­யில் அன்­ன­தா­னம் அனைத்து தரப்பு மக்­க­ளுக்­கும் பொது­வா­னது," என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!