அனைத்து மருத்துவமனைகளிலும் தீக்காய சிகிச்சை வழங்க உத்தரவு

அனைத்து மருத்துவமனைகளிலும் தீக்காய சிகிச்சை வழங்க உத்தரவு

2 mins read
aeff2cad-83a6-4dba-802c-ca23d3288f79
-

சென்னை: தீபா­வளி பண்­டி­கை­யின் போது வெடி­வி­பத்­தில் சிக்கி தீக்­கா­யம் அடை­ப­வா்­க­ளுக்கு விரைந்து சிகிச்சை அளிப்­ப­தற்கு ஏது­வாக தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்து அரசு மருத்­துவமனை­க­ளி­லும் சிறப்பு வாா்டுகள் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

தீபா­வளி சம­யத்­தில் அனைத்து அரசு மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் தீக்­கா­யங்­க­ளுக்குச் சிகிச்சை அளிக்­கும் வார்­டு­களை அமைக்க உத்­த­ர­வி­டப்பட்­டுள்­ள­தாக மருத்­து­வம், மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்சா் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

தீபா­வ­ளித் திரு­நாள் வரும் நவம்­பர் மாதம் 4ஆம் தேதி கொண்­டா­டப்­பட உள்­ளதை அடுத்து, மாநி­லம் முழு­வ­தும் புத்­தா­டை­கள், பட்­டா­சு­கள், பல­கா­ரங்­களை வாங்க மக்­கள் ஆர்­வத்­து­டன் கடை­வீ­தி­களில் குவிந்து வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, பட்­டாசு வெடிப்­ப­தற்­கான வழி­காட்டி நெறி­மு­றை­களை வெளி­யிட்­டுள்ள தமி­ழக சுகா­தார அமைச்சு, பட்­டாசு வெடிக்­கும் முன்பு எந்­த­வொரு கிரு­மி­நா­சி­னி­யை­யும் பயன்­ப­டுத்­த­வேண்­டாம் என­வும் காலணி அணிந்து திறந்த வெளி­யில் பட்­டா­சு­களை வெடிக்­க­வும் பட்­டாசு வெடித்த பின்பு கைக­ளைக் கழு­வ­வும் வேண்­டும் என்று அறி­வு­றுத்தி உள்­ளது.

பட்­டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்­டுமே அனு­மதி

இதற்­கி­டையே, தீபா­வளி அன்று இரண்டு மணி நேரம் மட்­டுமே பட்­டா­சு­களை வெடிக்­க­வேண்­டும் என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்­த­ர­விட்டுள்­ளார். இத­னால் வெடிப்­பி­ரி­யர்­கள் அதி­ருப்தி அடைந்­துள்­ள­னர்.

சென்­னை­யில் காலை 6 முதல் 7 மணி வரை­யி­லும் இரவு 7 முதல் 8 மணி வரை­யி­லும் என இரண்டு மணி நேரம் மட்­டுமே பட்­டாசு வெடிக்­க­வேண்­டும் என்­றும் கட்­டுப் பாட்டை மீறி பட்­டாசு வெடித்­தால் சட்­டப்­படி கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் கூறியுள்­ளார்.