50,000 மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக விவசாயிகள் புகார்

கோயம்­புத்­தூர்: பல்­லா­யி­ரக்கணக்­கான மக்­க­ளின் வாழ்­வா­தாரமாக விளங்­கும் நிலங்­க­ளைக் கைய­கப்­படுத்த அனு­மதி வழங்­கக்கூடாது என கோவை­ மாவட்ட ஆட்­சி­யர் ஜி.எஸ்.சமீ­ரனிடம் அங்குள்ள பெண் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

"எங்களது விவ­சாய நிலங்­களில் தொழிற்பேட்­டை­களை அமைக்கக் கூடாது. நிலத்தைக் கைய­கப்­படுத்து வதற்காக அனுப்­பப்­பட்ட பரிந்­துரை கடி­தத்தை ரத்து செய்ய வேண்டும்," என ஆட்­சி­யர் காலில் விழுந்து சில பெண் விவ­சா­யி­கள் வலியுறுத் திக் கேட்டுக்கொண்டனர்.

இதனைச் சற்­றும் எதிர்­பார்க்­காத ஆட்­சி­ய­ர் சமீரனுக்கு வயதில் மூத்தவர்கள் காலில் விழுகிறார்களே என பெரும் தர்மசங்­கடமாகிப் போனது. உடனே, அவர்­களைத் தூக்­கிவிட்ட ஆட்சியர், மனுக்களைப் பெற்­றுக்­கொண்­டார்.

கோவை மாவட்­டம், அவி­நாசி அரு­கில் உள்ள அன்­னூர், மேட்­டுப் பாளை­யம் உள்ளிட்ட ஆறு கிரா­மங்­களை உள்­ள­டக்­கிய பகு­தி­களில் 1,504 ஏக்­கர் நிலத்தை கைய­கப்­படுத்­து­வ­தற்­கான அனு­ம­தியை வழங்க ஆட்­சி­யர் சமீரன் மூலம் தமிழக தொழில் வளர்ச்சிக் கழ கத்தின் முதன்மை இயக்­கு­நர் தமி­ழக அர­சி­டம் கோரி­யிருந்தார்.

இந்நிலையில், கோவை ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் நடந்த விவ­சா­யி­கள் குறை­தீர்க்­கும் முகாமுக்கு வந்­தி­ருந்த பெண் விவ­சா­யி­கள் கோரிக்கை மனுக்கள் வழங்­கி­னர்.

மனு­வில், "அன்­னூர் சுற்று வட்­டாரக் கிரா­மங்­களில் வசிக்­கும் 50,000 மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் விவசா­யத்தை நம்­பியே உள்ளது. விவ­சா­யப் பணி­களை நம்­பியே இங்குள்ள கூலித் தொழி­லா­ளர்­களும் பிழைத்து வரு­கி­ன்றனர்.

"70 ஆண்டு கன­வுத் திட்­ட­மான அத்­திக்­க­டவு அவி­நாசி திட்­டத்­தி­னால் எங்­க­ள் வாழ்க்­கை­யில் ஒரு புதிய வசந்­தம் வரும் என்று நினைத்­துக்­கொண்­டி­ருந்த நிலை­யில், விவ­சா­யி­க­ளின் நிலத்தைக் கைய­கப்­ப­டுத்­தும் முயற்சி எங்­க­ளின் மனதை இடி­யாய்த் தாக்கி நிலை­கு­லைய வைத்­துள்­ளது.

"விவ­சாய நிலங்­களைக் கைய­கப்­ப­டுத்­தக்­கூ­டாது எனத் தீர்­மா­னம் நிறை­வேற்றி உங்­க­ளின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­தோம். ஆனா­லும், எந்த முறை­யான அரசு அறி­விப்­பும் இது­வரை வர­வில்லை என்­பது வருத்­தத்­திற்­கு­ரி­யது.

"தொழில்­பேட்டை திட்­டம் ரத்து என்ற சட்­ட­பூர்வ அறி­விப்பை வெளி­யிட ஆவன செய்யவேண்­டும்," என்று பெண் விவசாயிகள் கேட்­டுக்கொண்­டுள்­ள­னர்.

விவ­சா­யி­கள் நிலம் கைய­கப்­ப­டுத்தப்பட­ மாட்­டாது; தொழில்­பேட்டை திட்­டம் ரத்து என சட்­ட­பூர்வமாக அறிவிக்கவேண்­டும்.

கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண் விவசாயிகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!