திருவள்ளூர்: தீபாவளி பண்டிகையை ஒட்டி திருவள்ளுவர் மாவட்டத்தில் அஞ்சல் நிலையங்கள் மூலம் கங்கை நீர் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
30 ரூபாய்க்கு கங்கை நீர் விற்கப்படுவதாகவும் அதை வாங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் என்றும் அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி அன்று கங்கை நீரில் நீராடி பொதுமக்கள் அந்நாளைக் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு குறைந்த விலைக்கு கங்கை நீர் விற்கப்படுவதாக திருவள்ளுவர் அஞ்சல்துறை அதிகாரி முரளி தெரிவித்துள்ளார். 53 துணை அஞ்சலகங்கள் மூலம் கங்கை நீர் விற்கப்படுவதாகவும் இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

