தமிழகப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை திறப்பு

தமிழகப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை திறப்பு

1 mins read
3bf84f21-caa0-4ee5-97b5-ab51b9df5a02
-

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் அனைத்­துப் பள்­ளி­க­ளி­லும் முத­லாம் வகுப்பு முதல் எட்­டாம் வகுப்பு வரை இன்று முதல் வழக்­கம்­போல் நடை­பெ­றும் என தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து, அர­சாங்­கம் வெளி­யிட்­டுள்ள அனைத்து வழி­காட்டி நெறி­மு­றை­க­ளை­யும் பின்­பற்­று­வ­து­டன், உரிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் பள்ளி நிர்­வா­கங்­க­ளுக்குப் பள்­ளிக்­கல்­வித் துறை உத்­த­ர­விட்­டுள்­ளது.

மேலும், நீண்ட நாள்­க­ளுக்­குப் பிறகு பள்­ளிக்­குத் திரும்­பும் மாண­வர்­க­ளுக்கு இனிப்­பும் பூங்­கொத்­தும் கொடுத்து வர­வேற்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

தொடக்­கத்­தில், சுழற்சி முறை­யில் வகுப்­பு­களை நடத்­து­வது என்­றும் தொற்று பாதிப்பு முழு­மை­யாக கட்­டுக்­குள் வந்­த பின்­னர் முழு வீச்­சில் வகுப்­பு­களை நடத்­த­லாம் என்­றும் அரசு முடிவு செய்­துள்­ளது.

எம்­எல்­ஏக்­கள், எம்­பிக்­கள், ஊரக உள்­ளாட்சி மன்­றப் பிரதி­நி­தி­கள் உள்­ளிட்­டோர் தங்­கள் பகு­தி­களில் உள்ள அர­சுப் பள்­ளி­க­ளுக்கு நேரில் சென்று மாண­வர்­களை உற்­சா­கப்­ப­டுத்தி வர­வேற்க வேண்­டும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­வு­றுத்தி உள்­ளார்.

தமி­ழ­கத்­தில் சுமார் 19 மாதங்­களுக்­குப் பிறகு பள்­ளி­கள் மீண்­டும் திறக்­கப்­ப­டுவதால் மாண­வர்­கள் உற்சாகத்தில் உள்ளனர்.