டெங்கிக் காய்ச்சல் குறித்து ஆய்வு: மத்திய குழு தமிழகம் வருகை

1 mins read
0b02e7da-c89b-404a-8e6d-457446d1be31
-

சென்னை: தமி­ழ­கத்­தில் பரவி வரும் டெங்கிக் காய்ச்­சல் குறித்து ஆய்வு மேற்­கொள்ள மூன்று பேர் கொண்ட மத்­திய குழு சென்னை வந்­துள்­ளது என்று மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­ய­ன் தெரி­வித்­துள்­ளார்.

இக்­கு­ழு­வி­னரை தாம் சந்­தித்­துப் பேசி­ய­தா­க­வும் மாநி­லத்­தில் டெங்கிக் காய்ச்­சல் பாதிப்­புள்ள பகு­தி­க­ளுக்கு நேரில் சென்று அவர்­கள் ஆய்வு மேற்­கொள்­வார்­கள் என்­றும் அமைச்­சர் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசு­கை­யில் குறிப்­பிட்­டார்.

காய்ச்­சல் பர­வல் தடுப்பு நட­வடிக்கை­கள், உள்­ளாட்சி நிர்­வாகங்­கள், திட்­ட­மிட்­டுள்ள சுகா­தா­ரப் பணி­கள் குறித்த விவ­ரங்­களை மத்­திய குழு தெரிந்துகொள்­ளும் என்­றும் அதற்­கேற்ப சில ஆலோ­சனை­களை அக்­குழு முன்­வைக்­கும் என எதிர்­பார்ப்­ப­தா­க­வும் அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­னார்.

நடப்­பாண்­டில் தமி­ழ­கத்­தில் இது­வரை 493 பேர் டெங்­கிக் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் சென்­னை­யில் இரு­பது பேருக்கு மட்­டுமே பாதிப்பு உள்­ளது என்­றும் அவர் கூறி­னார்.

"காய்ச்­சல் பாதிப்பு உள்­ளதா என்­ப­தைக் கண்­ட­றிய கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதத்­தில் 30 ஆயி­ரம் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் 121,000 பரி­சோ­த­னை­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

"டெங்­கிக் காய்ச்­சல் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்து முதல்­வர் தலை­மை­யில் அண்­மை­யில் ஆலோ­ச­னைக் கூட்­டம் நடத்­தப்­பட்­டது. இது­கு­றித்து மத்­திய குழு­வி­டம் விவ­ரம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது," என்­றார் அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன்.

கொரோனா நில­வ­ரம்

நேற்று முன்­தி­னம் தமி­ழ­கத்­தில் புதி­தாக மேலும் 841 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது. மேலும் ஆறு பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.