10,000 கோவில் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமனம்

1 mins read
8ef07a74-3d21-4045-b836-17f72b46d784
-

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள கோவில்­க­ளின் பாது­காப்பை மேலும் வலுப்­ப­டுத்­தும் வித­மாக 10 ஆயி­ரம் பாது­காப்புப் பணி­யா­ளர்­கள் நிய­மிக்­கப்­பட உள்­ள­தாக அமைச்­சர் சேகர்­பாபு தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், நடந்து முடிந்த சட்டப்பேரவை மானி­யக் கோரிக்கையின்­போது அரசு வெளி­யிட்ட அறி­விப்­புக்கு ஏற்ப இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வதாகக் குறிப்­பிட்­டுள்­ளார்.

மாநி­லத்­தில் உள்ள 47 முது­நிலை திருக்­கோ­வில்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்­வ­தற்­காக திருக்­கோ­வில் வாரி­யாக எத்­தனை பாது­காப்புப் பணி­யா­ளர்­கள் தேவை என கணக்­கெ­டுக்­கும் பணி­கள் தொடர்ந்து நடை­பெற்று வரு­வ­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.

"மேலும் 489 முது­நிலை அல்­லாத திருக்­கோ­வில்­க­ளுக்­குப் பணி­யா­ளர்­களும் இந்து சம­ய­அ­ற­நி­லை­யத்­து­றை­யின் கட்­டுப்­பாட்­டில் உள்ள அனைத்து கோவில்­க­ளி­லும் பாது­காப்புப் பணி­யா­ளர்­களும் நிய­மிக்­கப்­ப­டு­வார்­கள்.

"அதற்­கான கணக்­கெ­டுப்பு பணி­கள் திருக்­கோ­வில் அலு­வலர்­கள் மூலம் நடை­பெற்று வரு­கின்­றன.

"இப்­ப­ணி­கள் முடி­வ­டைந்­த­வுடன் முறை­யான பயிற்­சி­கள் அளிக்­கப்­பட்டு தேவை­யான பணி­யா­ளர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வார்­கள்," என்று அற­நி­லை­யத்­துறை அமைச்­ச­ரான சேகர்­பாபு அறிக்கை­யில் தெரி­வித்­துள்­ளார்.