அரசுத் தேர்வாணைய தேர்வு மோசடி: 191 பேர் கைது

அரசுத் தேர்வாணைய தேர்வு மோசடி: 191 பேர் கைது

1 mins read
c431f5b2-99a8-493f-8a84-1fcbfb5132d1
-

சென்னை: தமி­ழக அர­சுத் தேர்­வாணை­யம் நடத்­திய தேர்­வு­களின்­போது மோசடி செயல்­களில் ஈடு­பட்ட 191 பேரைக் கைது செய்­துள்­ள­தாக சிபி­சி­ஐடி போலி­சார் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்த மோசடி தொடர்­பான வழக்கு விசா­ரணை சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் நடை­பெற்று வரு­கிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்­வா­ணை­யம் நடத்­திய 'குரூப் 4' பிரி­வுக்­கான தேர்­வில் 1.6 மில்­லி­யன் பேர் பங்­கேற்­ற­னர்.

தேர்வு முடி­வு­கள் வெளி­யா­ன­போது, ராமே­சு­வ­ரத்­தில் உள்ள மையத்­தில் இருந்து தேர்வு எழு­தி­ய­வர்­கள் மட்­டும் முதல் நூறு இடங்­களைப் பெற்­ற­தா­கத் தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து மிகப்­பெ­ரிய அளவில் மோசடி நிகழ்ந்­துள்­ள­தா­கப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் கண்­ட­னம் தெரி­வித்­த­தை­ய­டுத்து இவ்­வ­ழக்கு சிபி­சி­ஐடி போலி­சா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து மேற்­கொண்ட விசா­ர­ணை­யின்­போது 'குரூப் 4' தேர்வு தொடர்­பாக 95 தேர்­வர்­கள், தேர்­வா­ணைய ஊழி­யர்­கள் இருவர் உள்­ளிட்ட 115 பேரும் 'குரூப் 2' தேர்வு மோசடி தொடர்­பாக 59 பேரும் கைதா­ன­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

இதே­போல் கடந்த 2016ஆம் ஆண்டு நடை­பெற்ற மற்­றொரு தேர்­வில் நடந்­துள்ள மோசடி தொடர்­பா­க­வும் 17 பேர் கைதாகி உள்­ள­தாக சிபி­சி­ஐடி தரப்பு நேற்று முன்­தி­னம் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தது. இதுவரை 191 பேர் கைதாகியுள்ளனர்.