90 அணைகள், 4,000 பாசன ஏரிகள் நிரம்பின; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

சென்னை: கடந்த நான்கு நாள்­களுக்­கும் மேலாக நீடித்து வரும் கன­மழை கார­ண­மாக மாநி­லம் முழு­வ­தும் உள்ள 90 அணை­கள் நிரம்­பி­யுள்­ளன.

பல ஆறு­களில் சுமார் 15 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது. மேலும், சுமார் நான்­கா­யி­ரம் ஏரி­களும் நூற்­றுக்­க­ணக்­கான குளங்­களும் நிரம்­பி­யுள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

நீரில் மிதக்­கும் விளை நிலங்­கள்

விழுப்­பு­ரம், கட­லூர் மாவட்­டங்­களில் கன­ம­ழை­யால் நீர்­நி­லை­கள் நிரம்பி வரு­கின்­றன.

தென்­பெண்ணை ஆற்­றில் நீர்­வ­ரத்து அதி­க­ரித்து, தள­வா­னூர் தடுப்­ப­ணை­யில் மீண்­டும் உடைப்பு ஏற்­பட்­டுள்­ளது. பையூர், சேத்­தூர் பகு­தி­களில் தரைப்­பா­லங்­கள் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்­டன.

கட­லூ­ரில் பல ஆறு­களில் வெள்­ளம் பெருக்­கெ­டுத்து ஓடு­வ­தால் 30,000 ஏக்­கர் பரப்­ப­ள­வுள்ள விளை நிலங்­கள் சம்பா பயிர்­க­ளு­டன் நீரில் மிதக்­கின்­றன.

15 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு

காரைக்­கால் பகு­தி­யில் சுமார் 15 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு அதிக மழை பதி­வா­கி­யுள்­ளது. 2005ஆம் ஆண்டு நவம்­பர் 8ஆம் தேதி 30 சென்­டி­மீட்­டர் மழை பெய்­தது. அதன் பிறகு இப்­போ­து­தான் 25 சென்­டி­மீட்­டர் அள­வி­லான மழை பெய்­துள்­ளது.

மழை மீட்­டெ­டுத்த ஆறு

சிவகங்கை மாவட்­டத்­தில் தொடர் வறட்சி, ஆக்­கி­ர­மிப்பு, சீமைக்­க­ரு­வேல மரங்­கள் அதி­க­மாக வளர்ந்­தது உள்­ளிட்ட கார­ணங்­களால் விரு­சு­ழி­யாறு வற்­றிப்­போ­னது. 15 ஆண்­டு­க­ளாக அந்த ஆற்­றுப்­பாதை பாலை­வ­னம் போன்றே காட்­சி­ய­ளித்த நிலை­யில், அண்­மைய மழை விரு­சு­ழி­யாறு ஆற்றை மீட்­டெ­டுத்­துள்­ளது.

இந்த ஆறு மூலம் 72 கண்­மாய்­கள் பயன்­பெ­றும். இதன்­மூ­லம் 6,000 ஏக்­கர் விளை­நி­லம் பாசன வசதி பெறும் என்­றும் நூற்­றுக்­கும் மேற்­பட்ட கிரா­மங்­க­ளுக்கு குடி­நீர் கிடைக்­கும் என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

பல ஆண்டுகளுக்குப் பின் அங்­குள்ள எழு­வன்­கோட்டை அணை­யில் தண்­ணீர் ஆர்ப்­ப­ரித்துச் செல்­வதை ஏரா­ள­மா­னோர் கண்டு களித்து வரு­கின்­ற­னர்.

4,000 பாசன ஏரி­கள் நிரம்­பின

இதற்­கி­டையே தமி­ழக அர­சின் பொதுப்­ப­ணித்­துறை பரா­ம­ரிப்­பில் உள்ள சுமார் 4,000 பாசன ஏரி­கள் நிரம்­பி­யுள்­ளன.

மாநி­லத்­தில் மொத்­தம் உள்ள 14,138 பாசன ஏரி­களில் நேற்று காலை 10 மணி நில­வ­ரப்­படி 3,945 ஏரி­கள் நூறு விழுக்­காடு கொள்­ள­ளவை எட்­டி­ய­தா­க­வும் மேலும் 2,874 பாசன ஏரி­கள் 76% முதல் 99% வரை கொள்­ள­ளவை எட்டி வேக­மாக நிரம்பி வரு­வ­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

நிரம்­பி­யது வைகை அணை

வைகை அணை­யின் நீர்­மட்­டம் அதன் முழு கொள்­ள­ள­வான 71 அடியை எட்­டி­யது. இதை­ய­டுத்து அணை திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளது. இத­னால் தேனி, திண்­டுக்­கல் உள்­ளிட்ட ஐந்து மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த கரை­யோ­ரப் பகு­தி­களில் வசிக்­கும் மக்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

வைகை ஆற்­றில் இறங்­கவோ, கடக்­கவோ முயற்­சிக்க வேண்­டாம் என்று மாவட்ட நிர்­வா­கம் சார்­பாக அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

வைகை அணை ஒரே ஆண்டில் மூன்­றா­வது முறை­யாக நிரம்பி உள்­ளது என்­றும் அணை கட்­டப்­பட்டு 64 ஆண்­டு­களில் 31ஆவது முறை­யாக நிரம்­பி­யுள்­ளது என்­றும் அப்­ப­குதி மக்­கள் மகிழ்ச்­சி­யு­டன் கூறு­கின்றனர்.

மூன்று மாவட்­டங்­களில் விவசாயப் பணி­கள் தீவிரம்

இதற்­கி­டையே நெல்லை, தூத்­துக்­குடி, தென்­காசி மாவட்­டங்­களில் நேற்று முன்­தி­னம் மழை சற்றே தணிந்­தது. இதை­ய­டுத்து, கிடைத்த வாய்ப்பைப் பயன்­ப­டுத்தி அப்­ப­குதி விவ­சா­யி­கள் விவ­சா­யப் பணி­களை தொடங்­கி­ உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!