சென்னை: டெங்கிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் 'ஓசல்டாமிவிர்' போதுமான அளவு கையிருப்பு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பருவகால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளும் மருத்துவப் பொருட்களும் தமிழக அரசால் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக தமிழக மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
"டெங்கி சிகிச்சைக்காக வழங்கப்படும், 'ஓசல்டாமிவிர்' மாத்திரைகள் 3 லட்சமும் காய்ச்சலுக்கு வழங்கப்படும் 'பாராசிட்டமால்' மாத்திரைகள் 90 மில்லியனும் கையிருப்பில் உள்ளன.
"கடந்த ஆண்டு டெங்கிக் காய்ச்சலுக்கு 170,500 மாத்திரைகள் தேவைப்பட்டது. இம்முறை அதைவிட அதிக மாத்திரைகள் உள்ளன. இதுதவிர இதர பருவகால உடல்கோளாறுகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் போதுமான அளவில் உள்ளன," என்றார் தீபக்.
தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை, 3,800க்கும் மேற்பட்டோர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

