சென்னையில் பலத்த காற்றுடன் தொடர் கனமழை பெய்து வருவதால் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 6 மணி வரை சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க மாட்டா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வரவேண்டிய விமானங்கள் பெங்களூருக்கும் ஹைதராபாத்துக்கும் மாற்றிவிடப்படும்.
இன்று மாலை வானிலை நிலவரத்தைப் பொறுத்து, மாலை 6 மணிக்குப் பிறகு விமானங்கள் தரையிறங்க அனுமதிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்றும் சென்னையில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.
அதேநேரத்தில், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் வழக்கம்போல புறப்படும் என்றும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த விமானங்கள், வரவிருந்த விமானங்கள் என 10க்கும் மேற்பட்ட விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது.