கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க விதிக்கப்பட்ட தற்காலிகத் தடை மீட்டுக்கொள்ளப்பட்டது.
அதையடுத்து, விமான நிலையத்தில் மீண்டும் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியது. புனேவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 65 பயணிகளுடன் முதல் விமானமாக உள்ளூர் நேரப்படி மாலை 6.18 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கியது.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்கள் சென்னையில் தரையிறங்காமல் பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் இன்று பிற்பகல் 1.15 மணியிலிருந்து மாலை 6 மணி வரை விமானங்கள் வந்திறங்கத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், சென்னையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானங்கள் வழக்கம்போல் இயங்கின.