10 ஆண்டுகளில் கனிமவளக் கடத்தல்: சிபிசிஐடி விசாரணை

1 mins read
d8a94801-a977-4782-a0aa-752d6b2466dd
தமிழக-கேரள எல்லைப் பகுதியில் கனிமவளம் கடத்தியதாக அண்மையில் பறிமுதலான லாரிகள். படம்: தமிழக ஊடகம் -

சேலம்: தமி­ழ­கத்­தில் சேலம் பகு­தி­யி­லும் இதர இடங்­க­ளி­லும் கடந்த 10 ஆண்டுகளில் நடந்து இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­படும் சட்­ட­விரோத கனி­ம­வ­ளக் கடத்­தல்­கள் பற்றி சிபி­சி­ஐடி போலி­சார் பெரிய அள­வில் புலன்­வி­சா­ரணை தொடங்கி இருக்­கி­றார்­கள்.

சேலம் சிபி­சி­ஐடி போலிஸ் அதி­கா­ரி­கள் சேலம் அருகே உள்ள செட்­டிச்­சா­வடி, கூச­மலை உள்­ளிட்ட இடங்­க­ளுக்­குச் சென்று கடந்த சில நாட்­க­ளாக விசா­ரணை நடத்­தி­னர். தொடர்ந்து பல்­வேறு இடங்­க­ளுக்கும் சென்று ஆய்வு செய்­ய­ முடிவு செய்­துள்­ள­தாகத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

சேலத்­தில் உள்ள அரசு நிலங்­களில் அனு­ம­தி­யின்றி பல நூறு கோடி ரூபாய் மதிப்­பி­லான கனிம வளங்­கள் வெட்டி எடுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அதைச் சிறப்பு விசா­ர­ணைக்­குழு அமைத்து விசாரிக்க வேண்­டும் என்­றும் சென்னை சிபி­சி­ஐடி இயக்­கு­ந­ரி­டம் பொது­மக்­களில் ஒரு­வர் புகார் தெரி­வித்து இருந்­தார். அதற்­கான ஆதா­ரங்­க­ளாக பல புகைப்­ப­டங்­களை­யும் காணொ­ளி­களை­யும் மனு­வு­டன் சேர்­த்து அவர் அனுப்­பி­னார்.

கொள்­ளை­யைத் தடுக்கவேண்­டிய கனிமவளம் மற்றும் வரு­வாய்த்­து­றை­யி­னர், குற்­ற­வா­ளி­க­ளுக்கு எடுபிடிக­ளாக பணி­பு­ரிவதாக­வும் மனு­வில் அவர் குறிப்­பிட்டார்.

அந்த மனு மீது நட­வ­டிக்கை எடுத்து புலன்­வி­சா­ர­ணை­யைத் தொடங்­கும்­படி சிபி­சி­ஐடி இயக்­கு­நர் உத்­த­ர­விட்­டார். அதை ஏற்று அதி­கா­ரி­கள் புலன்­வி­சா­ர­ணை­யைத் தொடங்கி உள்­ள­னர். அதனால் சம்­பந்­தப்­பட்ட அலு­வ­லர்­கள் கலக்­கம் அடைந்­துள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன.