அரசு: நெல்லையில் டெங்கி ஆய்வு மையம்

அரசு: நெல்லையில் டெங்கி ஆய்வு மையம்

1 mins read
5bdb9ebe-a6a5-42b5-9f55-f5c1915d0ceb
சென்னை, அயப்பாக்கத்தில் டெங்கி மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் திரு­நெல்­வேலி மாவட்­டத்­தில் டெங்கிக் காய்ச்­ச­லுக்­கான தனிப்­பட்ட ஆய்வு மையம் அமைக்க மத்­திய அர­சி­டம் வலி­யு­றுத்தி உள்­ள­தாக தமி­ழக மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­னார்.

டெங்கிக் காய்ச்­ச­லால் நெல்லை, தென்­காசி மக்­கள் அதி­க­ள­வில் பாதிக்­கப்­ப­டு­வதை அவர் சுட்­டிக் காட்­டி­னார்.

சென்­னை­யில் கொரோனா, டெங்கி மழைக்­கால சிறப்பு மருத்­துவ முகா­மைத் தொடங்கி வைத்­துப் பேசிய அமைச்­சர், வட­கி­ழக்குப் பரு­வ­மழை தீவி­ர­ம­டைந்து இருப்­பதால், பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டு உள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டார்.

மூன்று நாட்­களில் மாநி­லம் முழு­வதும், 1,858 இடங்­களில் மருத்­துவ முகாம்­கள் நடத்­தப்­பட்டு, 965 நட­மா­டும் மருத்­துவ முகாம்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு அவற்­றின் மூலம் 74,283 பேர் பயன் அடைந்­துள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார். மாநி­லத்­தில் 100% கொவிட்-19 முதல் தடுப்­பூசி இலக்கு இம்­மா­தத்­திற்­குள் நிறை­வேற வேண்­டும் என்று முயற்­சி­கள் முடுக்­கிவி­டப்­பட்டு உள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­த­ரார்.

மழைக்­கா­லத்­துக்­கான சிறப்பு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் தனி வார்­டு­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. 108 மருத்துவ வாகனச் சேவை­யும் சிறப்­பாகச் செயல்­பட்டு வரு­கிறது என்று அமைச்சர் சுப்­பி­ர­ம­ணி­யன் மேலும் தெரி­வித்­தார்.

மாநி­லத்­தில் கொரோனா தொற்­றும் மர­ண­மும் மேலும் குறைந்து வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.அன்­றாட புதிய தொற்று 1,000க்கும் கீழ் உள்­ளது. மர­ணங்­கள் 10க்கும் கீழே உள்­ளன.