சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று இடைவிடாமல் கனமழை பெய்த நிலையில், மோசமான பருவநிலை முடிந்துவிட்டதாக தனியார் வானிலை ஆய்வாளரும் ஆர்வலருமான பிரதீப் ஜான் ஃபேஸ்புக்கில் நேற்று தெரிவித்தார்.
மோசமான நிலை முடிவுக்கு வந்துவிட்டது. இனி அவ்வப்போதுதான் மழை பெய்யும். வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டதைப் போன்ற சூழல் இனி இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

