ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை: பிரேமலதா

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை: பிரேமலதா

1 mins read
c6a0cd82-0bd8-4c58-803f-cc06f509c365
-

சென்னை: ஆட்­சி­களும் கட்­சி­களும் மாறி­மாறி வந்­தா­லும் மக்­கள் காணக்­கூ­டிய காட்­சி­கள் எது­வும் மாறி­ய­தாகத் தெரி­ய­வில்லை என கனமழை, வெள்ள பாதிப்பு, மீட்­புப் பணி­கள் குறித்து தேமுதிக பொரு­ளா­ளர் பிரே­ம­லதா விஜ­ய­காந்த் ேவதனை ெதரி­வித்­துள்­ளார்.

"மழைக்­கா­லத்­தில் சென்னை மக்­கள் அதிக அள­வில் பாதிப்பை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். இரண்டு நாள் மழைக்கே சென்னை மாந­க­ரம் கடல்­போல் மாறி­யுள்­ளது. ஒவ்­வொரு ஆட்­சி­யி­லும் மக்கள் தங்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­த­ரத் தீர்வு வேண்­டும் எனக் கோரி வருகின்றனர். ஆனால், ஆட்­சி­யா­ளர்­கள் யாரும் இதைக் கவ­னிப்­ப­தில்லை. ஆட்சி மாறி­னா­லும் காட்­சி­கள் மாறவில்லை.

"சமா­தி­கள், மேம்­பா­லங்­கள், நினை­வி­டங்­கள் கட்­டு­வ­தை­விடவும் சென்­னை வெள்ள பாதிப்­பிற்கு அடுத்த மழைக் காலத்­திற்­குள் நிரந்­தரத் தீர்வு காண­வேண்­டும்," என்­று பிரே­ம­லதா விஜ­ய­காந்த் வலி­யு­றுத்தி உள்­ளார்.